புதன், 29 ஜூலை, 2009

மொட்டை போட்ட நடிகைகள்!

''ஹீரோக்கள் மட்டும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நல்ல பெயர் வாங்கிகிட்டு போயிடுறாங்க. ஆனா... எங்களை மட்டும் குத்துப் பாட்டுக்கும், கூத்தடிக்கிறதுக்கும் மட்டும் பயன்படுத்திகிறாங்க. நாங்க என்ன செய்யுறது வித்தியாசமா நடிக்க யாரும் வாய்ப்பு கொடுக்கலயே...



என்னதான் ரஜினி, விஜய்க்கூட ஜோடி போட்டு நடித்தாலும் கொஞ்ச நாளைக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியலை'' பிரபலமான நடிகைகள் இப்படி பொலம்பிக்கிட்டு இருக்குறாங்கன்னு நமக்கு செய்தி வந்துச்சு.



உடனே அப்படி பொலம்பற நடிகைகளையெல்லாம் ஒண்ணு சேத்து ரூம் போட்டு யோசிக்க வைச்சோம். அவங்களோட நாமும் சேர்ந்து தலையை பிச்சுக்கிற நிலைமை வந்துச்சு.

அதான் மொட்டை அடிச்சுட்டோம்.














இந்த கெட்டப் எப்படி இருக்கு!!!

ஸாரி, இத யாரும் நம்ம வேண்டாம். ஹய்யோ.......... ஹய்யோ...........




பின் குறிப்பு: புது இயக்குனர்களுக்கு... இந்தப் படத்தை பார்த்து ஐடியா ஒர்க்கவுட் ஆச்சுன்னா எங்கள தனியா கவனிங்க...

வெள்ளி, 24 ஜூலை, 2009

இது உண்மையான காதல்










தன் உறவுகள் செத்து மடியும் போது ஒன்றுமே தெரியதது போல தங்களின் வேலைகளை செய்துகொண்டு திரியும் இந்த உலகத்தில் இப்படியும் ஒரு உறவு.பிரிவை தாங்க முடியாமல் அழும் இந்த பறவையை பார்த்தாவது மனிதனுக்குள் மனித நேயம் வளரட்டும்....

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது





ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

நிறம்:



ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.
[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!]

முக தோற்றம்:


ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.

மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.
சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.





மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.

உடை அலங்காரம்:


பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.



பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.
இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.

சிகை அலங்காரம்:



லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.

உடல் தோற்றம்;





ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.


மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!


முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]

மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!

செவ்வாய், 21 ஜூலை, 2009

டீன் ஏஜ் காதல் Vs பெற்றோர்





டீன் ஏஜில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது 'காதல்'.
நல்லது கெட்டது என்ன என்று உணர்ந்து கொள்ள இயலாத இந்த பருவத்தில், இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் உணர்வை 'காதல்' என்று அர்த்தம் கொண்டு, தங்களது படிப்பு, எதிர்காலம் என அனைத்தையும் சிதைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், இந்த பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு இது புரிவதும் இல்லை, அறியுரை கூறினாலும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் இந்த காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள்.

எதிர்த்த வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுத்து பையன் மாட்டிக்குவான் வீட்ல, அல்லது டீன் ஏஜ் பெண்ணிற்கு அடிக்கடி குறிப்பிட்ட நேரத்தில் ஃபோன் கால் வந்து வீட்டில் மாட்டிக்கொள்வாள், அந்நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் அவர்களை எப்படி கையாள வேண்டும்??

டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் உயிர்கொல்லியான இந்த பதின்ம வயது காதலில் சிக்கிவிடாமல் டீன் ஏஜ்ஜில் இருப்பவர்களை எப்படி தடுப்பது??


பெற்றோருடன் சில வார்த்தைகள்.........!

* மகன் - மகளின் காதல் விவகாரம் தெரிந்து விட்டால், விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்காமல், பக்குவமாக எடுத்துக்கூறுங்கள். வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து 'காதல்' போன்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல், படிப்பில் கவனம் செலுத்த அன்போடு அறிவுரை கூறுங்கள்.

*அறிவுரை கூறுகிறேன் பேர்விழி என்று, நண்பர்கள் உறவினர்களிடம் விஷயத்தை கூறி அறிவுரை கூற வைக்காதீர்கள். அவ்விதம் நீங்கள் விஷயத்தை பரப்பினால், குற்றயுணர்வினால் கூனி குறுகி போய்விடுவார்கள் உங்கள் பிள்ளைகள்.

*வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் செய்த தவறினை மிகப்பெரிய விஷயமாக்கி, அவர்களை தனிமை படுத்திவிடாதிருங்கள்.

* பதின்ம வயது காதலினால் எடுத்த அவசர முடிவுகள் சிலரது வாழ்க்கையை எப்படி தடம்புரள செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, நடைமுறை வாழ்க்கையின் எதார்த்ததை எடுத்து கூறலாம்.

* கண்கொத்தி பாம்பாக எப்போதும் அவர்களை பின் தொடர்ந்து கண்கானிப்பதை தவிர்த்து விடுங்கள். சந்தேக கண்ணோட தன்னை இன்னமும் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதிலுள்ள குற்றயுணர்வை அதிகப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்க செய்துவிடும்.
சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்

* அவர்களுக்கு அதிகம் பிடித்த பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த உற்சாகப்படுத்துங்கள். குடும்பமாக சுற்றுலா செல்லலாம், அது அவர்களது மன இறுக்கத்தை மாற்றும்.

*ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்திருக்கும், அதனை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.அவர்களது திறமையை மனதார பாட்டுங்கள்.

* செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி, காயப்படுத்தாதிருங்கள்!


டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில வார்த்தைகள்........!

*டீன் ஏஜ் பருவம், உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது.வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான்.

*வாழ வேண்டிய எதிர்காலம் காத்திருக்க......டீன் ஏஜ் காதலால் கல்லறை பயணம் மேற்கொண்டு விடாதிருங்கள்.

*இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள்ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட்/கேர்ள்ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம்.

*'டீன் ஏஜ்'என்பது வசந்தகாலம் போன்றது. உடல் வளர்ச்சியடையும் அதே காலகட்டத்தில், எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அந்த இனக் கவர்ச்சி காதல் என்று பெயர் சூட்டுவதும், தேவையற்ற நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் அறியாமை.

"டீன் ஏஜ் காதல் தொடருமா? தொடராதா??".....நிச்சயமான பதிலளிக்க இயலாது.
ஆனால் பெரும்பாலும் அனைவரையும் இந்த வயதில் காதல் தொட்டு விட்டாவது போய்விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது.
எனவே திருமணம் போன்ற முக்கியமாக முடிவெடுக்க மனதளவிலும், உடலளிவிலும், பொருளாத ரீதியிலும் தயாராக இல்லாத இந்த தருணத்தில், பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம்.

* பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கூறுங்கள்.

* பெற்றோருக்கும் உங்களுக்கும் நடுவில் திரை விழாமல், நட்புறவு இருந்தால்.......வெளியுலகில் எதிர்பால் நட்பு கிடைக்கும்போது, அது பாசமா? வேஷமா? என்று தெரியாமல், அதில் மூழ்கி உங்களை இழந்து விடாமல், தடுமாறாமல் இருக்க உதவும்.



உடன்பிறந்தவர்கள்/நண்பர்களிடம் சில வார்த்தைகள்.........!

*உங்கள் நண்பன் உடன் படிக்கும் பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுத்து, அதை அந்த பெண் வகுப்பு ஆசிரியரிடமோ, அல்லது தன் அண்ணன்/அப்பாவிடமோ கொடுத்து, அந்த பையனை மாட்டிவிட்டால், அவனிடம்.....

"என்ன மச்சி அட்டு ஃபிகருக்கு கூட உன்னை பிடிக்கல.........இப்படி மாட்டி விட்டு டின் கட்டிடுச்சு" அப்படின்னு கிண்டல் அடிக்காமல்,

"இந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலையா, விட்டு தள்ளு...........ஆத்துல வேற மீனா இல்ல??? ஆனா வலை விரிக்க இது நேரமில்லடா மாப்பி, டீன் ஏஜ் ல ஜாலியா ஃப்ரண்ட்ஸோட கிரிக்கட் விளையாடினோமா, அரட்டை அடிச்சோமா, மீதி இருக்கிற டைம்ல கொஞ்சம் படிச்சோமான்னு இருக்கிறதை விட்டுட்டு , இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, லவ்ஸ் பண்றதெல்லாம் வேஸ்ட்டா"

என்று சகஜமாக பேசி உற்சாகமூட்டுங்கள்.

*வீட்டில் உங்கள் தம்பியோ தங்கையோ காதல் விஷயத்தில் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டு டோஸ் வாங்கினால், நீங்களும் கூட சேர்ந்து தூபம் போட்டு ஏத்தி விடாமல், அவர்களை கொலை குற்றவாளியை பார்ப்பது போல் பார்க்காமல்...........எப்போதும் போல் சகஜமாக பேசி, படிப்பிலோ விளையாட்டிலோ ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

ராசியும் காதல் பலன்களும்

மேஷம்
..............

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்



ரிஷபம்
............
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்
..............

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.



கடகம்
...........

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது



சிம்மம்
............

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்



கன்னி
...........

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.



துலாம்
..............

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
..................

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.



தனுசு
..........

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்


மகரம்
...........

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது



கும்பம்
...........

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.



மீனம்
..........

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.


இந்த இடுகையை சுட்டுத்தந்த நண்பன் நிசாந்தனுக்கு நன்றி

செவ்வாய், 14 ஜூலை, 2009

சில கவிதை கிறுக்கல்கள்

காதல் கவிதைகள்

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

முத்தம்

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

காதல் கவிதை

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?



புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!



கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!




சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!






மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
உனைப் போலவே பிடிபடாமல் பறக்கின்றன.
எனை நான் மறந்து காலங்கள் பல
உனை நினைக்க மறந்தும் தான்...

உன்னிடம் காதல் சொல்வதற்காய்
ஒத்திகை பார்க்க நினைக்கின்றேன்
கிடைக்க வில்லை தனிமை
என்றும் என் மனதில் நீங்காமல் நீ...

இன்னல் மத்தியில் தமிழன்
மறந்தும் விட்டான் இறைவன்
உன் கண்களை படைத்த பின்
எமை மறந்ததில் குற்றம் இல்லை தான்...

என்னை விட உன்னை யாராலும்
இவ்வளவு ரசிக்க முடியாது காரணம்
யாருக்குமே நீ இவ்வளவு
அழகாக தோன்றப் போவதில்லை

இறைவன் மீது ஆற்றாக் கோபம் எனக்கு
கண்களுக்கு இமைக்க கற்றுக் கொடுத்தது அவன் தானே!!!
இமைக்கும் நேரத்தில்
மறைகிறாயே நீ...........

காதலியிடம் காதலை சொல்லா
அனைவருமே ஞானி தான்
அவர்களுக்கு தான் மரணம் ஒரு பொருட்டல்லவே
தினம் தினம் இறப்பவர்கள் தானே அவர்கள்....

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
புதிதாய் தெரிகிறாய்..
சிரிக்கும் போது நெஞ்சை
சிதைத்து விடுகிறாய்..

பார்த்துப் பார்த்தே
பாதி உயிரை வாங்கி விட்டாய்..
நீ சாதாரணமாக கூறும் வார்த்தைகளுக்கு கூட
புதிய அர்த்தம் கற்பித்து மகிழ்கிறேன்..

அன்பே! தயவு செய்து கேட்கின்றேன்..
என்னை காதலிக்கின்றேன் என மட்டும் கூறி விடாதே,,,
இந்த வலி சுகமாக தான் இருக்கிறது,,,
உனக்கும் இதே வலி இருக்கும் என்ற ஒரே நம்பிக்கையில்.........



ஈழம் என்பது

ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது

ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்

உங்களால் எங்கள்
உறக்கத்தைத்தான்
கலைக்க முடியும்

எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாராலும் கலைக்க முடியாது






இது தானா புரட்சி?

நண்பா!
உன்னை முதல் முதலாய்
பார்த்த போது
உனக்குள்
புரட்சி
ஒன்று இருப்பதைக் கண்டு
நான் என்னை மறந்து
பரவசம் அடைந்தேன்.

புரட்சி என்னும் வார்த்தைக்கு
பொருள் தேடி
அகராதியை புரட்டினேன்.

அதில் உன் முகம் தெரிய
அகராதி புரட்டுவதை
நிறுத்தி விட்டேன்

நண்பா!
திருமணத்திற்கு
தாலி ஒரு
அவமான
சின்னமாகச் சொன்னாயே?

இன்று
உன் காதலியைக் கண்டவுடன்
தாலி ஒரு
அன்புச் சின்னம்
என்று உளறுகிறாயே?

இதுதான் உன் புரட்சியா?

ஞாயிறு, 12 ஜூலை, 2009

under water

வியாழன், 9 ஜூலை, 2009

வித்தியாசமான சில புகைப்படங்கள்




















ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

நன்றி http://kavithaikadhalan.blogspot.com

செவ்வாய், 7 ஜூலை, 2009

வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான தருணம்

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான தருணம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அதெல்லாம் சரிதான்... ஆனால் நாங்கள் இங்கே அடுக்கியுள்ளது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிப்பது.

* அதிகாலையில் சூரிய உதயத்தை ரசிப்பது
* மழை பெய்யும் போது குடிக்கும் தேனீர்
* குழந்தையின் முத்தம்
* கோயிலில் கடவுளின் தரிசனம்
* குயிலின் ஓசை
* காதலில் விழுவது
* வாய் வலிக்க சிரிப்பது
* பிடித்தவரிடம் இருந்து வரும் கடிதம்
* இயற்கை காட்சிகளை ரசித்தவாறு பயணம்
* தனிமையில் பிடித்த பாடலை கேட்பது
* படுக்கையறையில் இருந்து மழை பெய்யும் சப்தத்தை உணர்வது
* குளிர் காலத்தில் சூடான போர்வை
* நீங்கள் தேடித் தேடி அலைந்த பொருள்
* எங்கோ ஒலிக்கும் தொலைபேசி அழைப்பு
* நுரை பொங்க இருக்கும் குளியலறை
* சிரிப்பூட்டல்
* சிறந்த உரையாடல்
* கடற்கரை
* உங்கள் பழைய மணிபர்சில் எதிர்பாராமல் கிடைக்கும் பணம்
* எதையோ நினைத்து தானாக வரும் சிரிப்பு
* தூறலில் நடப்பது
* உங்களை சிறந்தவர் என்று மற்றவர் சொல்லி கேட்பது
* நண்பர்களுடன் இருப்பது
* நீங்கள் எழுந்திரிக்க வேண்டிய சில மணி நேரங்களுக்கு முன்பு கண் விழித்து பார்த்துவிட்டு தூங்குவது
* முதல் முத்தம்
* வயதான உறவினருடன் உரையாடல்
* வளர்ப்பு நாயுடன் விளையாடல்
* நண்பர்களுடனான நள்ளிரவு அரட்டை
* அன்புடன் தலை முடியை கோதிவிடுதல்
* இனிமையான கனவு
* பிடித்தவருடன் கை கோர்த்து நடந்து போவது
* கோடையில் நீச்சல்
* பிடித்த படம் பார்ப்பது
* உங்களுக்குப் பிடித்தவர் உங்களை காதலிப்பதாக சொல்வது
* மிகப் பிடித்த பொருள் பரிசாகக் கிடைப்பது
* பிடித்தவருக்கு சமைப்பது
* பிடித்த பாடலை முணுமுணுப்பது
* குழந்தைகளுடனான முதல் அறிமுகம்
* காதலிப்பவரை அணைப்பது
* நீங்கள் கொடுத்த பரிசைப் பிரிக்கும்போது

காதல் நகைச்சுவை

காத‌‌ல் நகை‌ச்சுவைக‌ள் ஏராள‌ம் உ‌ண்டு. அவை வெறு‌ம் நகை‌ச்சுவை‌க்காக ம‌ட்டுமே. அ‌ந்த ரக‌த்‌தி‌ல் தா‌ன் இவையு‌ம் சேரு‌ம்.

காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.


சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.



வாய்ப்பு கிடைத்தால்

ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.


பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.





மனைவி : நான் செ‌ய்‌தி‌த் தாளா இருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன். எப்போதும் உங்க கையில இருக்கலாமே

கணவன் :நீ செ‌ய்‌தி‌த் தாளா இருந்தா நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : ?!?!?!?!::

வியாழன், 2 ஜூலை, 2009

எவ்வாறு தடைசெய்யப்பட்ட ‘YouTube Shows’ வீடியோக்களைப் பார்ப்பது?

யூடியூப் YouTube Showsசை ஆரம்பித்தப்போது, சந்தோஷத்தில் வானில் பறந்தேன், கற்பனை வெள்ளத்தில் மிதந்தேன்.விரைவில் நான் அறிந்துகொண்டேன், இந்த YouTube Shows இலங்கைப் பயனர்களுக்கு கிடையாது. பல முக்கியமான தொலைக்காட்சித் தொடர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அமெரிக்க நண்பர்களுக்கே பார்க்கலாமாம்.
நான் ரொம்பவும் எரிச்சல் பட்டேன். எதுக்கு இந்த யூடியூப் காரணுகள் பார்க்க முடியாத வீடியோக்களை எங்களுக்கு இருகென்டு காட்டிக் கடுப்பேத்துறானோ தெரியாது.வீடியோவில் சொடுக்கினால், பின்வரும் பிழைச்செய்தி வரும் “This video is not available in your country due to copyright restrictions”.
என்ன நடக்குதெண்டு கூகிளிட்ட கேட்டா அவரிண்ட பதில் இதுதான்….
Some YouTube content partners choose to make their videos available only to certain countries. For instance, they may only have the licensing rights for a particular region. On occasion, YouTube does block specific content in order to comply with local laws in countries where YouTube has been launched. For instance, certain Nazi imagery is unlawful in parts of Europe.
எங்களின் ஜபி முகவரியை வைத்தே வீடியோக்களை எங்களுக்கு காட்டாமல் மறைக்கின்றார்கள். எங்கள் ஐபி முகவரி நாங்கள் இலங்கையில் இருந்து வருகின்றோம் என்பதைக் காட்டிகொடுத்துவிட கூகிளார் மேல் உள்ள பிழைச செய்தியைக் காட்டுவார்.
பல ஐரோப்பிய பயனர்களுக்கும் இதே நிலமைதான். நான் இணையத்தில் தோண்டியதில் பின்வரும் புரோக்சி கண்ணில் பட்டது.
http://www.hypercloak.com உங்களுக்கு யூடியூப்பில் உள்ள பல நிகழ்ச்சிகளைக் காண உதவும்.அவர்களின் தளமூடாகச் சென்று YouTube showsவைக் கண்டு கழியுங்கள்.

கணினியில் தமிழ் தெரிவது எப்படி?

கணினியில் ஆங்கிலம் மட்டுமே இயங்கும் அல்லது கணினி ஆங்கிலத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். சும்மா உடான்ஸ் விடாதேய்யா என நினைக்கிறீர்களா? பொறுங்கள்.நீங்கள் நினைப்பது சரிதான். அப்படியானால், கணினி தமிழைப் புரிந்து கொள்ளுமா, சற்றுப் பொறுங்கள். கணினி தமிழ் மட்டுமல்ல எந்த மனித மொழியையும் புரிந்து கொள்ளாது. அதற்குப் புரியக் கூடிய ஒரே மொழி இலக்க மொழி (Machine Language) தான். இந்த மொழியில் இரண்டே இரண்டு குறியீடுகள் தான். அவை ஒன்று மற்றும் சுழி (பூஜ்யம்).
ஆனால் நாங்கள் ஆங்கிலத்தில் தானே கணினித் திரையில் பார்க்கிறோம். கட்டளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே இருக்கின்றன என்று தோன்றுகிறதா? அவை உங்களுக்கு ஆங்கிலத்தில் இருக்கின்றன ஆனால் கணினி அந்த ஒவ்வொரு கட்டளையையும் அது புரிந்துகொள்ளக் கூடிய இலக்க மொழியில் மாற்றப்பட்டு கணினியின் மூளையான செயலகம் (Processor) நிறைவேற்றுகிறது.
கணினி எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு இயங்குதளம் தரவுதளம் இயங்குகின்றன என்கிற நுணுக்கங்களுக்குச் செல்லாமல் திரையில் ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுத்துருவில் தெரிவது எப்படி என்று மட்டும் பார்ப்போம்.
கணினியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் விரும்பும்படி தான் ஆங்கில மொழியின் எழுத்துக்களைக் கூட பயன்படுத்திச் சேமிக்க வேண்டும். அதனால் ஒரு கணினி புரிந்து கொள்ளும் படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.
சரி ஆங்கிலம் தெரிவதே இப்படி இடியாப்பச் சிக்கல் என்றால் வேறு சில மொழிகள் இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் தெரிவது எப்படி?
ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை (Character Encoding) என்று அழைக்கிறோம். இதற்காகத் தான் இவ்வளவு மெனக்கிட வேண்டி இருக்கிறது.
நாம் இந்த குறியீட்டு முறையை பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களை கணிணிக்குள் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அதை நாம் கணினி திரையில் பார்க்க விரும்பும் பொழுது, சேமித்த எண்களையெல்லம் கூட்டி, கழித்து எழுத்துக்களாக மாற்றும் வேலையை யாராவது செய்ய வேண்டுமில்லையா? கவலையை விடுங்கள், கணிப்பொறி எழுத்துரு (Fontஎன்ற கோப்புச்செயலியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன எழுத்து வடிவம் என்பதை தேர்ந்தெடுத்து பிரதியிட்டுவிடும்.
ஆங்கில மொழிக்கு, தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்க நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக ஆஸ்கி - ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் அமெரிக்க தேசியத் தரநிர்ணயக் கழக முறை சுருக்கமாக ஆன்ஸி - Windows ANSI (American National Standards Institute) என்ற குறியீட்டு முறையை பயன்படுத்துகிறார்கள்.
தமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துருவும் பற்பல தன்னார்வலர்களின் படைப்புகளாகும். ஆளாளுக்கு ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எழுதி வந்தார்கள். இதனால் இவர் எழுதுவது அவருக்கும் அவர் எழுதுவது இவருக்கும் புரியாத நிலை ஏற்பட்டது. விளைவு? தமிழில் ஒருவர் எழுதியது இன்னொருவருக்கு கிரேக்கம் இலத்தீன் போலத் தெரிந்தன.
இதனைச் சீர்செய்யும் முயற்சியில், புனேயில் உள்ள சி-டாக் - C-DAC (Centre for Development of Advanced Computing) என்ற இந்திய அரசு நிறுவனம் பல்வேறு கணினி நிபுணர்கள், விற்பன்னர்களின் துணையுடன் இந்திய மொழிகள் அனைத்திற்கும் பொதுவாக இந்திய நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக 'இஸ்கி' - ISCII (Indian Standard Code for Information Interchange) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இக்குறியீடு இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்கு பொதுமக்களிடம் போதுமான வரவேற்பைப் பெறாததால் தோல்வியடைந்தது. பெரும்பாலான இந்திய மொழிகளைத் தன்னுள் அடக்க வல்ல எளிதான ஒரு குறியீட்டு முறையை உருவாக்குவதில் 'இஸ்கி' ஓரளவுக்கு வெற்றி கண்டாலும் மக்கள் 'அஸ்கு புஸ்கு' என்று அதனை ஒதுக்கிவிட்டார்கள்.
பிறகு, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான தமிழ் நியமக் குறியீட்டு முறை அல்லது 'திஸ்கி' (TSCII - Tamil Standard Code for Information Interchange) குறியீட்டு முறையை அறிவித்தது.
நல்லவேளை, நாம் பிழைத்தோம். தற்போது ஒருங்குறி (Unicode) சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், உலக மொழிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறது! (நம்ப முடியவில்லையா? இந்தக் கட்டுரையை எந்த தமிழ் எழுத்துருவும் (Tamil Font) நிறுவப்படாத, ஒருங்குறி வசதியுள்ள கணிணியில் போட்டுப் படித்துப்பாருங்கள்!!) ஒருங்குறி தமிழ்க்கணிமையின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய பல்வேறு ஆர்வலர்களின் பங்களிப்பையும் நினைவு கூரவேண்டியது நம் கடமை.

Windows Vista வின் Desktop தோற்றத்தை Windows Xp ல் எவ்வாறு கொண்டுவரலாம்

உங்களிடம் Windows Xp இருந்தால் Windows Vista வின் Desktop தோற்றத்தை நீங்கள் பெறவிரும்பினால் Google நிறுவனம் இலவசமாக அந்தசேவையை வழங்குகின்றது அதற்கு நீங்கள் கீழ் உள்ள இணையச்சுட்டியை கிளிக்செய்க
http://www.desktop.google.com/

படம் 1 ல் உள்ளதுபோல பக்கம் திறக்கும் அதில் Google Desktop installieren என்பதனைக்கிளிக்செய்து தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவுங்கள்





நிறுவியபின்னர் உங்கள் கணனித்திரையில் Windows Vista வின் தோற்றத்ததை படம் 1 உள்ளதுபோல காண்பீர்கள் விரைவாக நிறுவக்கூடிய மென்பொருள்

பிளாஷ் கேம்





















love meter

உங்களுக்கு பிடிச்சவங்களோட பெயரயும் உங்க பெயரயும் சேர்த்து உங்க லவ் எப்படி என்று தான் பாருங்களேன்.....
உதாரணத்துக்கு....


புதன், 1 ஜூலை, 2009

உங்கள் மூளை எப்படி வேலை செய்கின்றது என்று அறிந்து கொள்ளப் போகின்றீர்களா?

இங்கே எழுதியிருக்கிற சொற்களை கூறாமல், என்ன வர்ணம் என்று விரைவாகக் கூறுங்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...