திங்கள், 29 ஜூன், 2009

கணினி ஆணா… பெண்ணா..?”

ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..

” கணினி ஆணா… பெண்ணா..?”

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..
மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்… அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ..

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்… எந்த நேரத்துல மயங்கும்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..

அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்களில் அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினிவருங்காலத்தில் கம்ப்யூட்டர் நம்ம வரவேற்பறைல இருக்கர அழகான கண்ணாடி டேபிள் மாதிதான் இருக்கும்.மைக்ரோஸாப்ட் இப்போ உருவாக்கிருக்கர ” Microsoft Surface ” டெக்னாலஜிஅட்டகாசமா இருக்கு.




இனி கம்ப்யூட்டர்ல வேல செய்ய டெக்னிகல் அறிவெல்லாம் தேவயில்ல. நாம எப்படி பொருட்கள எடுக்கறோம் வைக்கிறோம் அதே மாதி கையாலயே எல்லாம் செயலாம்.
வருங்காலத்துல நம்ம பிள்ளைங்க மவுஸ் , கீபோட்டுல்லாம் பாத்துட்டு ” இதெல்லாம் வச்சி எப்டிப்பா வேல செஞ்சிங்க ? காமெடியா இருக்குன்னு ஆச்சரியமா பாப்பாங்க” அப்டி மவுஸ் எல்லாம் தேவ இல்லாம போயிரும். நம்ம கம்யூட்டர்ல Desktopன்னு சொல்றோமே அது இனிமே நெஜமாவே டெஸ்க் டாப் ஆக போவுது.

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் File Transfer செய்ய..,

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் File Transfer செய்ய..,
உங்களுக்கு தெரியுமா? விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.

Start க்கு சென்று Run -ல்

fsquirt

என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.

இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.

செவ்வாய், 23 ஜூன், 2009

கோணேஸ்வரா இந்துக்கல்லூரி


கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமைவிடம்: 8°34′27.68″N, 81°14′5.05″E

கோணேஸ்வரா இந்துக்கல்லூரி திருகோணமலையில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையாகும். இது 1897 ல் திருகோணமலையில் இருந்த சில பெரியார்களால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கல்லூரி 2100 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் 15 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு மாவட்டத்தின் ஒரு பெரும் கல்வி வழங்கும் தாபனமாக விளங்குகின்றது. பொதுப் பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெறுவதோடு மாவட்டத்தில் இருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புகின்ற கல்லூரியாகவும் விளங்குகிறது. விளையாட்டு, சாரணியம், கலை, இலக்கியம் கலாசாரம் போன்ற பல்வேறு இணைக் கல்வி முயற்சிகளிலும் மாவட்ட மாகாண தேசிய மட்டங்களில் வெற்றிகள் பலவற்றை இக்கல்லூரி பெற்றுக்கொண்டிருக்கின்றது.


[தொகு] வரலாறு
திருக்கோணமலை நகரிலே வாழ்ந்த சில இந்துப்பெரியார்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1922ம் ஆண்டில் ஒரு ஆரம்பப் பாடசாலையாக அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

இப்பாடசாலை ஆரம்ப காலத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.

1925ம் ஆண்டில் திரு.வல்லிபுரம்பிள்ளை முதலியார் தலைமையில் இருந்த முகாமையாளர் சபை பாடசாலையை இராமகிருஷ்ண மிஷனுக்கு கையளிப்பதற்கு முடிவு செய்ததையடுத்து சுவாமி விபுலாநந்தர் அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை பொறுப்பேற்றார். சுவாமி அவர்கள் எமது பாடசாலையைக் கையேற்ற ஜுன் 1 ஆம் திகதியே கல்லூரித் தினமாக இப்போது அனுஷ்டிக்கப்படுகிறது.

சுவாமி விபுலாநந்தரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையும், இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையும் துரித வளர்ச்சியைக் கண்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றன. புதிய கட்டடங்களும் கட்டப்படலாயின.

பொதுமக்களின் நிதியைக் கொண்டு கட்டப்பட்ட காளியப்பு மண்டபம் 1927ம் ஆண்டில் அப்போதைய ஆளுநராக இருந்த சேர். N ஹர்பட் ஸ்டான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிக் காலமாகிய திரு. பி. கே. சம்பந்தரது நினைவாக 1933ல் மண்டபம் கட்டப்பட்டது.

1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1930ம் ஆண்டு ஜுலை மாதம் வரையில் சுவாமிகள் அதிபராகக் கடமையாற்றி, பின்னர் இராமகிருஷ்ண மிஷனின் கீழள்ள சகல பாடசாலைகளையுளும் பரிபாலிக்கும் பொறுப்பை ஏற்று அதிபர் பதவியை திரு. பி. இராமச்சந்திரா அவர்களிடம் கையளித்துச் சென்றார்.

சுவாமி விபுலாநந்தரது காலத்தில் கல்லூரி படிப்படியாக வளர்ச்சி கண்டது. விஞ்ஞானக் கல்வி மேம்படுத்தப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இலண்டன் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையை மாணவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

1932ம் ஆண்டில் கல்லூரி சிரேஷ்ட இடைநிலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. இராமகிருஷ்ண மிஷனின் அரவணைப்புடன் வளர்ந்து வந்த கல்லூரியின் வளர்ச்சி இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1940ல் இருந்து 1945 வரை தடைப்பட நேர்ந்தது. யுத்த காலத்தின்போது பாடசாலைக் கட்டடங்கள் இராணுவத்தினதால் பொறுப்பேற்கப்பட்டன. இக்காலத்தில் கல்லூரி தற்காலிகமாக வேறு இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தன. 1945ல் மீண்டும் கல்லூரி தனது சொந்தக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கியது.

திரு.எல்.எச்.ஹரதாச அவர்கள் தனது காலஞ்சென்ற தந்தையார் நொரிஸ் டி சில்வா அவர்களின் நினைவாக அமைத்துக் கொடுத்த நூலகக் கட்டடம் 1947ம் ஆண்டில் திறந்து வைக்கப்ட்டது.

கால ஓட்டத்தில் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை இந்துக் கல்லூரி என்ற பெயரோடு மாவட்டத்தின் முன்னணிக் கல்லூரியாக வளர்ச்சி பெற்று வர இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை கோணேஸ்வர வித்தியாலயம் என்ற பெயரோடு ஆரம்ப இடைநிலைக் கல்விக்கு மாவட்டத்தின் சிறந்த பாடசாலையாக உருவாகி வந்தது.

1952ம் ஆண்டில் இந்துக்கல்லூரி முதலாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்போது அம்பலவாணர் அகம் என அழைக்கப்படும் கல்லூரியின் முதலாவது மாடிக்கட்டடம் 1955ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1958ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்துக்கல்லூரியும், ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயமும் இராமகிருஷ்ண மிஷனின் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் 1961ம் ஆண்டில் மிஷனரிப் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தபோது இந்தப் பாடசாலைகளை தனித் தனியான இரு பாடசாலைகளாகவே இராமகிருஷ்ண மிஷன் அரசாங்கத்திற்கு கையளித்தது.

இவ்விரு பாடசாலைகளும் 1993ம் ஆண்டில் ஒரே பாடசாலையாக இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தையும் பெற்று இணைந்து கொண்டன. திருக்கோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை முதலாவதாகவும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இரண்டாவதாகவும் தேசிய பாடசாலையாகிய பெருமை இக் கல்லூரிக்கு உண்டு.


[தொகு] கல்லூரிப்பண்
கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் கல்லூரிப்பண், பண்டிதர் இ. வடிவேல் அவர்களால் யாக்கப்பட்டது. கோணேஸ்வரா வித்தியாலயம், இந்துக்கல்லூரி ஆகிய இருபாடசாலைகளிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இப்பண்ணே பாடப்பட்டுவந்தது. பாடசாலைகள் இணைக்கப்பட்ட பின்னர் இரு பாடசாலைகளின் பண்களும் ஒன்றாக்கப்பட்டு சிறு மாற்றங்களுடன் தற்போது பாடப்பட்டு வருகிறது.


வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே

சிறீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி வாழ்கவே

ஆதி அந்தம் இல்லாத ஆண்டவன் தெய்வம்

அன்னையும் பிதாவும் எங்கள் முன்னறி தெய்வம்


எண்ணோடு எழுத்தத்தனை ஈந்தவர் தெய்வம் -இனி

என்றும் அவரையே பணிந்து இனிது வாழுவோம்


நல்ல உள்ளம் வளர்ப்போம் உடல் உறுதி வளர்ப்போம்

கலை கல்வி வளர்ப்போம் தூய செல்வம் வளர்ப்போம்


நல்லவரை நாடி நிதம் நல்வழி நிற்போம் - எங்கள்

நாட்டினிற்கே சேவை செய்து நாமும் வாழுவோம்


முத்தமிழும் கற்று மேலை வித்தையும் கற்ப்போம் - உயர்

சத்தியமும் ஐக்கியமும் வாழ்வில் வளர்ப்போம்


வித்தை தரும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின்

உத்தமராம் ஆசிரியர் தமை மதிப்போம்


கல்லூரியின் இணையத்தளம்

http://www.trincohindu.sch.lk/tamilHindu/

வெள்ளி, 19 ஜூன், 2009

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

கோப்பு வடிவங்களை மாற்ற Free File Conversion tool for you

கோப்பு வடிவங்களை மாற்ற
Free File Conversion tool for you



ஒரு கோப்பு வடிவில் (file type) இருந்து வேறொரு கோப்பு வடிவிற்கு மாற்றுவதற்கு நிறைய இணைய தளங்களின் சேவைகள் இலவசமாக (free service) வழங்கப்படுகின்றன.

ஆனால் அவற்றின் மூலம் சில குறிப்பிட்ட வடிவ கோப்புகளை மட்டுமே, மற்றொரு வடிவிற்கு மாற்ற முடியும். கணினி என்னும் சமுத்திரத்தில் எண்ணற்ற கோப்புகள் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில். இதற்காக எந்த மென்பொருளையும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யாமல் கோப்பு வடிவங்களை மாற்றுவதற்காக உள்ள இணையதளம் http://www.convertfiles.com/


100+ கோப்புகளை இந்ததளம் ஆதரிக்கிறது. நம் கணினியில் உள்ள கோப்பு (அ) இணையத்தில் ஏற்கனவே எங்கோ உள்ள கோப்பு ஒன்றின் யுஆரெல் (URL), நமது மின்னஞ்சல் முகவரி, மேலும் எந்த வடிவிற்கு மாற்றப் போகிறோம் என்பதை உள்ளீடு செய்தல் வேண்டும்.

வடிவு மாற்றப்பட்ட பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சலைத் திறந்து அங்கே உள்ள லின்க்கைச் (link) சொடுக்கினால் போதும். மூன்று நாட்கள் வரை அந்த சுட்டிக்கு உத்திரவாதம் (validity) உண்டு. அதற்குள் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் (download) செய்துவிடவேண்டும்.

http://www.convertfiles.com/

செவ்வாய், 16 ஜூன், 2009

offline Free Tamil Unicode writer

online இல்லாத போதும் தமிழில் இலகுவாக எழுதிக்கொள்ள கீழே உள்ள வலைத்தளத்துக்கு சென்று உங்களின் கணணியில் பதிவிறக்கி சேமித்து கொள்வதன் மூலம் தமிழ் யுனிகோட் ஐ இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்

http://yesudas.rs.googlepages.com/WOG_UniPad.zip

திங்கள், 8 ஜூன், 2009

காதலில் விழ மாத்திரை!


ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம்.

கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.

காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.

காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.

அட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.

இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.

அந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.

ஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம்.

பின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.

மனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.

இந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்ணோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.

இப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

இனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.

பையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்

ஞாயிறு, 7 ஜூன், 2009

video

வியாழன், 4 ஜூன், 2009

உலகின் மிகச்சிறந்த முத்தங்கள்

உலகின் மிகச்சிறந்த முத்தங்கள்




























































































































New mobil phone and future laptops

Touch screen phone









நோக்கியா phones


















laptops







































புதன், 3 ஜூன், 2009

பெண்மை செய்யும் மாயம்

நம்ம ஆட்கள் இப்படியே அழிஞ்சு போறானுக.....









செவ்வாய், 2 ஜூன், 2009

face of the future

20 வயதில் 60 ஐ பார்க்கனுமா?????????????

என்னுடைய முகத்தை பல வயது தோற்றங்களில் பார்க்க வேண்டும் என்பது பல நாள் ஆசை அதற்காக தேடிய பொழுதில் சிக்கியது இந்த வலைத்தளம்

இந்த வலைத்தளத்துக்கு சென்று நீங்களும் முயற்சி செய்து பாருங்க...


http://morph.cs.st-andrews.ac.uk/Transformer/index.html

இதில் உங்களது புகைப்படம் ஒன்றை உட்செலுத்தி அதில் சில தரவுகளை கொடுத்து உட்சென்று உங்களது வயது தோற்றங்களை மாற்றிப்பார்க்கலாம்

உதாரணதுக்கு
கீழ் இருக்கும் நம்ம தமன்னாவ பாருங்க அப்ப புரியும்

இது போல பல வயது தோற்றங்கள செய்து பார்க்க முடியும்










Related Posts Plugin for WordPress, Blogger...