வியாழன், 31 டிசம்பர், 2009






புதன், 30 டிசம்பர், 2009

vinnai thaandi varuvaayaa FULL song

HOSANNA.....

வியாழன், 3 டிசம்பர், 2009

தமிழ் எண்களும் அளவீடுகளும் ...

.ஏறுமுக எண்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

செவ்வாய், 3 நவம்பர், 2009

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேறும் விண்டோஸ் 7


மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.




புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.



அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.



நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.

3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.

4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.



6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.



7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.



8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.



9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.



விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.

இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.



முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.

மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.

விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஹாலோவீன்

< ஹாலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறை ஆகும். சம்ஹைனில் கொண்டாடப்படும் செல்டிக் திருவிழாவையும் மற்றும் கிறித்தவ புனித நாளான 'ஆல் சைன்ட்ஸ் டேயையும்' சார்ந்து உள்ளது இது மிகவும் மத சார்பு இல்லாத ஒரு திருவிழா ஆகும். அனால் கிறித்தவர்களும் பகன்ஸ்களும் தங்களுடைய மதச்சார்பை வலிமையாக தெரிவித்துள்ளனர்.[1][2][3].அயர்லாந்திலிருந்து வந்தவர்கள் வட அமெரிக்காவிற்கு மேம்பட்ட நாகரிகத்தை 1846-ல் அயர்லாந்தின் கிரேட் பமைனின் ஆட்சியின் போது கொண்டு வந்தார்கள். [4] இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் சம்பந்தப்பட்ட நாளாக கருதப்படுகிறது மற்றும் ஜேக்-ஒ-லேன்டென் அடையாளங்களையும் சம்பந்தபடுத்தி உள்ளது. ஹாலோவிதின் செயல்பாடுகள் என்பது தந்திரமாக செயல்படுவது, ஆவிகள் பற்றிய விசயங்களில் ஈடுபாடு, ஒரு சிறிய தீயை கொண்டு தேவை இல்லதைவைகளை எரிப்பது, ஆடை அலங்கார விஷயங்களில் ஈடுபாடு கொள்வது, திகிலான இடங்களை சென்று பார்ப்பது, உருவங்களை உருவாக்குவது, பயமுறுத்தும் கதைகளை படிப்பது, பயமுறுத்தும் படங்களை பார்ப்பது ஆகியவைகள் ஆகும்.


வரலாறு
ஹாலோவை என்பது உண்மையில் hola பழைய ஐரிஷ்சை [5]சேர்ந்த பழைமையான செல்டிக் திருவிழாவான சமஹைன் ஆகும். சமஹைன் திருவிழாவானது காலிக் நாகரிகத்தின் அறுவடை காலங்களில் கொண்டாடப்படுகிறது பல நேரங்களில் [6] இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.[7] பாரம்பரியமாக திருவிழாவானது பழைய செல்டிக் பகன்களால் மற்றவர்களுக்கு அனுப்பியவற்ற்றின் கணக்கை குறித்துவிட்டு இருப்பை அழிப்பதாகும்.பழைய செல்டஸ்கள் தற்போதைய அக்டோபர் 31, ஹாலோவின் என அழைக்கபடுவதாவது இறந்தவர்களுக்கும் உயிரோடு வாழ்பவர்களுக்கும் உள்ள எல்லைகோட்டை கரைப்பதாகும். இறந்தவர்கள் வாழ்பவர்களுக்கு நோய் ஏற்படுத்தியும் பயிர்களை சேதப்படுத்தியும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் பெரும்பாலும் இந்த திருவிழாக்கள் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அழிக்கப்படும் பொருட்களை இடுகின்றன பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதை போல கிழிக்கப்படுகிறது அல்லது கேட்ட ஆவிகளை சமாதனப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.



பெயரின் உண்மை தோற்றம்
ஹாலோவின் என்ற பெயர் ஆனது ''ஆல் ஹால்லோஸ்' ஈவ் (ஈவன் மற்றும் ஈவ் என்பது ஈவினிங் என்பதன் சுருக்கம் ஆகும் ) என்பதிலிருந்து வந்தது. ஆனால் ஹாலோவின் இதன் என் ' ஐ ஈவன் என்பதிலிருந்து பெறுகிறது. இது ஆல் ஹாலோவீன் டே என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இது "ஆல் செயின்ட்ஸ் டே" என அழைக்கப்படுகின்றது.[10]இது வடக்கு ஈரோப்பாவின் பகன் நாகரீக மக்களால் பலதரப்பட்ட மத சார்பு மக்களால் கொண்டாடப்படுகிறது. [11]. போப்ஸ் கிரகரி III மற்றும் போப்ஸ் கிரகரி IV இதை பழைய கிறித்தவ விருந்தான ஆல் செயின்ட்ஸ் டேவை மே 13 (இது பகன் நாளாகும் மற்றும விடுமுறை நாளாகும் லெமுயுரெஸ்ஸின் விருந்து ஆகும் ) என்பதிலிருந்து நவம்பர் 1 என்று ஆக்கும் வரை இது பகன் விடுமுறை நாளாக கொண்டாடப்பட்டது. ஒன்பதாவது நூற்றாண்டில் தேவாலயங்கள் [[ப்ளோரைன்டேனின் ஒரு நாள் குறிப்பு ஏடு |ப்ளோரன்ஸ் காலேண்டர்]] இந்த நாளை சூரிய மறைவு எப்பொழுதோ அப்பொழுது நாள் தொடங்குவதாக கூறுகிறது. ஆல் சைன்ட்ஸ் டே என்பது ஹாலோவீன் நாளுக்கு ஒரு நாள் பின்னரே தொடங்குவதாக கூறப்படுகிறது.இருந்த போதிலும் ஹாலோவீன் மற்றும் சைன்ட்ஸ் டே இந்த இரு நாட்களும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

[] அடையாளங்கள்
ஹாலோவீன் நாளன்று பழைய செல்டஸ் எலும்புக்கூடுகளை முன்னிலைபடுத்துவார்கள் . இது அவர்களை விட்டு பிரிந்தவர்களை பற்றி சொல்கிறது. ஈரோப்பிலிருந்து கொண்டு வரப்பட்ட வழக்கத்தில் இந்த விளக்குகள் டர்னிப் அல்லது ருத்தபாக வேர் வகை காய்கறிகளினால் முதன் முதலில் பொருத்தப்பட்டன. தலையானது மிகவும் வலிமையான உடலின் பகுதியாக கருதப்படுகிறது. இந்த தலையானது அறிவு, ஆன்மா, ஆகியவற்றை கொண்டுள்ளதால் செல்ட்ஸ் தலை காய்கறியை எதையும் பயமுறுத்தும் விதமாக உள்ள பகுதியாக இதை மூட நம்பிக்கை யாக கொண்டுள்ளனர். [12] வேல்ஸ், ஐரிஷ், பிரிட்டிஷ் நம்பிகைகளானது பிரசென் வல்லுனர்களின் தலைமையை கொண்டு செயல்பட்டது. இது காலம் காலமாக இந்த சமுதாயத்தினர் கடை பிடித்த முறைகளாகும். இது பிரசென் வல்லுனர்களின் பெரிதாக கருதப்படும் அறிவுத்தன்மையை பற்றி இது போன்றதன் மூலம் அவர்களின் அறிவுத்தன்மையை உயர்ந்ததாக தெள்ள தெளிவாக விளக்குகிறது. ஜேக்-ஒ-லேன்டேர்ன் என்ற விளக்கத்தை ஐரிஷ் பெரியவரான ஸ்டிங்கி ஜேக் [13] ,என்ற பொறாமை குணம் கொண்ட, சூதாடும் வழக்கமுள்ள குடிக்கும் பழக்கமுள்ள ஒரு பழைய விவசாயியை என்பவரை கொண்டு கூறுகிறது. அவர் பேயானது மரத்தில் ஏறுமாறு செய்து பின்னர், அது ஏறுகின்ற சமத்தில் அதன் கிளையை குறுக்கே வெட்டினார். இதற்கு பழி வாங்கும் செயலாக சாபமாக பேயானது ஒரு சாபம் கொடுத்தது. ஜேக்கை கண்டித்து அவன் பூமியில் அங்கும் இங்குமாக தனது ஒரே விளக்கின் மூலம் இரவில் அலையுமாறு சாபம் கொடுத்து .அதனால்தான் குழி வடிவமான தனது டர்னிப் எனும் வேர் வகை காய்கறிகளுக்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஜேக் கொண்டுள்ளார். பூசணிக்காயை வெட்டி ஹாலோவீனை தொடர்பு செய்யும் செயலாக வடக்கு அமெரிக்காவில் [14] கடைபிடிக்கப்படுகிறது. பூசணிக்காய் எளிதாக கிடைப்பது மட்டுமில்லாமல் மிகவும் பெரிதாகவும் இருக்கிறது. இதனால் பூசணிக்காயை பகுதி பகுதிகளாக ஆக்குவது என்பது டர்னிப்பை வெட்டுவதை விட எளிதாக இருக்கிறது. பல குடும்பங்கள் ஹாலோவீன் நாளை பூசணிக்காயை ஒரு பயமுறுத்தும் அல்லது நகைச்சுவை ததும்பும் ஒரு முகத்தில் வைத்து அதை தங்களது வீடு வாசலில், இருள் வந்ததும் வைப்பார்கள் அமெரிக்காவில் பூசணிக்காயை வெட்டுவது என்பது கிரேட் பமைன் காலமான ஐரிஷ் ஊடுருவலுக்கு முன்பிலிருந்தே கடைபிடிக்கப்படும் செயலாக இருந்து வருகிறது. [மேற்கோள் தேவை] பூசணிக்காய் வெட்டும் செயல் ஆனது அமெரிக்காவில் பொதுவாக அறுவடை காலங்களில் உண்மையில் கடை பிடிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. பொதுவாக அமெரிக்கா ஹாலோவினோடு தொடர்பு உடையதாக 19 ம் நூற்றாண்டு மத்திமம் முதல் கடைசி வரை இருந்ததாக தெரியவில்லை.

ஹாலோவினோடு தொடர்புடைய படங்கள் என்பது ஹாலோவின் காலங்களில் தொடர்புடவைகள் கொண்ட தாக்கம் ஆகும். கோதிக் மற்றும் பயமுறுத்தும் கதைகளான பிரான்கென்ஸ்டின் மற்றும் டிராகுலா ஆகியவற்றின் மூலம் என்று கருதப்படுகிறது. மற்றும் ஒரு நூற்றாண்டு வேலைப்பாடான அமெரிக்காவின் திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றும் கிராபிக்ஸ் வல்லுனர்களின் [15] மூலம் ஏற்பட்ட தாக்கம் ஆகும் . இவைகள் இருளையும் திகிலையும் மையப்படுத்தியதை விட அவைகளை வியாபாரம் ஆக்கின. ஹாலோவின் தொடர்புடைய படங்கள் இறப்பு, கெட்டவைகள்,ரகசியங்கள், மந்திரமானவைகள், தத்துவார்த்தமான அசிங்கமான உருவங்கள் ஆகியவற்றில் கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமான பாத்திரங்களாக பேய், அரிவாளை பிடித்த பயமுறுத்தும் உருவங்கள், பிசாசுகள், கெட்ட ஆவிகள், அரக்கர்கள், சூனியக்காரர்கள் , பூசணிக்காய் மனிதர்கள், சந்தோசம் இல்லாத ஒரு சிறிய மனிதன்,ரத்தத்தை உறிஞ்சும் கெட்ட ஆவிகள்,நரிகளாக மாறிய மனிதர்கள், உற்சாகமின்மை கொண்ட மனிதர்கள், மம்மிகள் எனப்படும் எகிப்திய முறையை போன்ற சமாதிகள், எலும்பு உருவங்கள், கருப்பு பூனைகள், சிலந்திகள், வௌவால்கள், ஆந்தைகள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. [16]


குறிப்பாக அமெரிக்காவில், குறியீடு என்பது பாரம்பரிய பயமுறுத்தும் படங்களால் தாக்கம் கொடுக்கப்பட்டது. (இந்த படங்கள் கதை சார்ந்த உருவங்களாக பெரிய உருவங்களான பிராங்ஸ்டேனின் பெரிய உருவங்கள் மற்றும் மம்மிகளை ஒத்து இருந்தன)பூசணிக்காயின் பருவக்காலங்கள் ,வெளிப்புற சவ்வுகளை கொண்ட தானியங்கள் மற்றும் காகங்களை பயமுறுத்தும் உருவங்கள் ஆகியவைகள் குறியீடுகளாக உள்ளன. வீடுகள் ஆனது ஹாலோவீன் குறியீடுகளால் அடிக்கடி இந்த வகையான குறியீடுகளால் அலங்கரிக்கப்படுகின்றன.


மிக முக்கிய இரண்டு வண்ணங்கள் ஹாலோவின் தொடர்புடவைகள் எவைகள் என்றால் ஆரஞ்சு மற்றும் கருமை ஆகும்.[17]



 ஆடை அலங்கரிப்புகள்
முதன்மைக் கட்டுரை: Halloween costume
ஹாலோவின் ஆடை அலங்கரிப்புகள் என்பது மிக பெருத்த உருவங்கள் கொண்ட பேய்கள், சூனியக்காரிகள் , எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் ஆகியவற்றின் உடை அலங்காரங்கள் ஆகும். ஆடை அலங்கரிப்புகள் ஆனது பாரம்பரிய பயமுறுத்தல், என்பதை தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,மற்றும் திரைப்படங்கள், மற்றும் நவீன நாகரீகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.




ஆடை அலங்கரிப்புகள் மற்றும் விற்பனைகள்
பிக் ரிசெர்ச் என்ற நிறுவனம் யனைடெட் ச்டேட்ஸ்ஸில் உள்ள நேஷனல் ரிடைல் பெடரஷன் 53.3% வாடிக்கையாளர்கள் அலங்கரிப்புகளுக்காக ஹாலோவீதின் 2005 என்ற வகையான பொருட்களுக்கு $38.11 சராசரியாக செலவழிக்கிறார்கள். (இது $10 என முந்தைய வருடத்தை விட அதிகமானது) மற்றபடி அவர்கள் $4.96 பில்லியன் என 2006 -ல் செலவழிப்பதாக கருதப்படுகிறது. இது முந்தைய வருடத்தை விட $3.3 பில்லின் அதிகம் என கருதப்படுகிறது. [18]




 யுநிஸெப்
முதன்மைக் கட்டுரை: Trick-or-Treat for UNICEF
"யுநிஸெப்-கான தந்திரம் என்பது வடக்கு அமெரிக்காவில் பொதுவான ஒன்றாக ஹாலோவீன் வழக்கை ஒட்டி வந்ததாக தெரிகிறது. பிலடெல்பியா என்ற கிராமத்தில் 1950 -ல் இது அந்த கிராமத்தை ஒட்டிய நாகரிகமாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அது 1952-ல் தேசியமயமாக கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பள்ளிகளிலிருந்து சின்ன டப்பாக்களில் அவர்கள் சென்ற வீடுகளின் மூலம் கிடைத்த சிறிய தொகையை வைத்து செயலை செயல்படுத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது. (நவ நாகரிகத்தில் ஹால்மார்க் போன்ற கம்பெனி வகை செயல்படுத்துபவர்கள் அவர்களின் அங்கிகாரம் பெற்ற கடைகளில் மூலம் செய்கிறார்கள்)இது வரை குழந்தைகள் $119 மில்லியன் (யுஸ்) யுநிஸெப்க்காக அவற்றின் தொடக்கத்திலிருந்து செலவழித்துள்ளது. 2006 -ல் , யுநிஸெப் பல பகுதிகளில் ஹாலோவின் மூலம் டப்பாக்களின் மூலம் கிடைத்த வருமானங்களை நிறுத்தியது. இது பாதுகாப்பான மற்றும் நிர்வாக காரணங்குகளுக்காக இவ்வாறு செய்யப்பட்டது. [19]







இந்த ஹாலோவின் வாழ்த்து அட்டைகளில் ௧௯௦௪ என்பதில் இருந்து , கணிப்பை பற்றி சொல்கிறது : இளமையான பெண் ஒரு இருட்டறையில் இருந்து ஒரு கண்ணாடியை பார்க்கும் பொது , அதில் எதிர்கால கணவனின் முகத்தை காண்கிறாள்
ஹாலோவீன் குழுக்களில் பாரம்பரியமாக பல விளையாட்டுகள் உள்ளன. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றான முழ்கடித்தல் அல்லது ஆப்பிளை ஒரு பாத்திரத்தில் உள்ள திரவத்தில் மேலும் கீழுமாக வேகமாக முழ்கடித்தல் அல்லது ஒரு பரந்த பாத்திரத்தில் உள்ள தண்ணிரில் இருந்து ஆப்பிளை விளையாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் எடுத்தல் ஆகும் (இதை மேலும் வலிமையான வீரம் நிறைந்த விளையாட்டு ஆக்க ,ஆப்பிளின் காம்பை பல்லால் எடுத்து விளையாடும் செயல்களும் உள்ளன.)[20]இதில் இருந்து சற்றே மாறுபட்ட ஒரு விளையாட்டு என்னவென்றால் முழங்காலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு பிளவு பகுதியை கொண்டு அதை ஆப்பிளின் மீது தொடுவதற்கு செயல்படுத்தும் ஒரு முயற்சி ஆகும். மற்றொரு ஒரு விளையாட்டான ஒரு கயிற்றில் தொங்கவிடப்படும் இனிப்பு மிக அதிகமாக உள்ள அல்லது இனிப்பு நிறைந்த ஒரு வண்ணமயான திரவத்தை , ஒரு வேகமாக் வேக வைத்த ஒரு ரொட்டி துண்டோடு சேர்த்து [[ஒரு சின்ன வேக வைக்கப்படும்,செறிவான ஒரு பிஸ்கட்டை விட சிறிதான ஒரு ரொட்டி (ரொட்டி வகை)|கயிற்றில்]] தொங்க விடுவது ஆகும். குழந்தைகள் "கில் தி விட்ச் கேம்" என்ற விளையாட்டை ஒரு பெரிய பேப்பரில் ஒரு மாயா மந்திரக்காரியை வரைந்தும் மற்றும் வண்ணங்கள் கொடுத்தும் மற்றும் கருப்பு வண்ணத்தில் வட்டங்களை வரைந்தும் அவற்றை அந்த உருவங்களின் பின்னால் பொருத்தியும் , ஒரு பெருத்த உருவங்களாக காண்பிப்பது என்பதாக விளையாடுகின்றனர் . அதன் பிறகு விளையாட்டு வீரர்களை கண் கட்டி மற்றும் அவர்களை மூன்று முறை சுற்றியும் மற்றபடி பெருத்த வீக்கங்களை துணி கட்டிய விளையாட்டு வீரர்களின் மீது ஏற்படுத்துவது ஆகும். எந்த ஒரு விளையாட்டு வீரர் மூக்குக்கு மிக அருகில் பெருத்த வீக்கங்களை ஏற்படுத்துகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார். [21]


பாரம்பரியமாக ஹாலோவினில் விளையாடப்படும் விளையாட்டுகள் என்னவென்றால் , கணித்தல் ஆகும். புய்சினி ("பூசீனி" என அழைக்கப்படும்) அயர்லாந்தில் உள்ள ஒரு விளையாட்டின்படி , கண்கட்டிய மனிதன் ஒரு மேஜை முன்பாக உட்காரவைக்கப்படுகிறான். இதன் மீது பல திரவங்கள் நிரப்பிய சிறிய கோப்பைகள் வைக்கப்படுகின்றன. கோப்பைகளில் உள்ள திரவங்கள் மாற்றி மாற்றி கலக்கப்பட்டு , மேஜையின் முன் மீது உள்ள கண் கட்டிய மனிதன், ஒரு கோப்பையில் உள்ள திரவத்தை அல்லது அந்த கோப்பையை தொடுகிறான். அந்த கோப்பையை தொடுவதை பொறுத்து அவனது வருங்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. 19 -ம் நூற்றாண்டில் அயர்லாந்தில் உள்ள இளம் பெண்கள் துப்பாக்கி குண்டுகளை கோப்பைகளில் வைத்து அவற்றோடு மாவு சேர்த்து குலுக்கிறார்கள் .[மேற்கோள் தேவை] பாரம்பரியமான ஐரிஷ் மற்று ஸ்காட்டிஷ் முறையான கணிப்பு என்னவென்றால் , எதிர்கால மனைவியை கணிப்பது எவ்வாறு என்றால் ஒரு ஆப்பிளை நீளவாட்டில் வெட்டி அந்த பகுதியை ஒருவருடைய தோள்களுக்கு மேலாக போட வேண்டும். அந்த பகுதியானது கீழே விழும் போது எதிர்கால மனைவியின் பெயரின் முதல் எழுத்தை பிரதிபலித்து விழுகிறது. இந்த வழக்க முறையானது அமெரிக்காவின் ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ் கிராம பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இடையே இருந்தது.[மேற்கோள் தேவை]


திருமணம் ஆகாத பெண்கள் ஒரு கருமையான அறையில் உட்கார்ந்து ஒரு கண்ணாடியை ஹாலோவின் இரவு அன்று பார்த்தார்களானால், அவர்களுடைய எதிர்கால கணவனின் உருவம் கண்ணாடியில் தெரியும்.  இருந்த போதிலும் திருமணத்திற்க்கு முன்பாகவே இறக்க நேரிடின் ஒரு தலைப்பகுதி கண்ணாடியில் தோன்றும். இந்த வழக்கமானது 19 - ம் நூற்றாண்டு கடைசி பகுதியில் இருந்து 20 -ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை மதச்சடங்கு சார்பாக வாழ்த்து அட்டைகளில் இடப்பட்டு பரவலாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

ஹாலோவின் குழுக்களில் பேய் கதைகளை சொல்லியும் கொடுமையான படங்களை பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. ஹாலோவின் கருத்துக்கள் பற்றிய டிவி பகுதிகள் மற்றும் அவற்றை பற்றிய சிறப்பானவைகள் (குழந்தைகளிடம் கருத்துக்கள் அடையும் வகையில்) ஹாலோவின் விடுமுறை நாட்களுக்கு முன்பாக ஒலி பரப்பப்படுகிறது. பல பயங்கரமான படங்கள் ஹாலோவின் விடுமுறை நாட்களுக்கு முன்பாக விடுமுறை நாட்களின் சூழலை பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படுகிறது




 தோற்றத்தில் பயங்கரமான பகுதிகள்
 Haunted attraction
ஹாலோவின் பற்றி அதிகம் பேசும் காலங்களில் பல இடங்கள் பயங்கரமான திகிலான ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் பொழுது போக்கு இடங்கள் ,அங்கே வருபவர்களுக்கு ஒரு பயத்தையும் ,திகிலையும் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. இந்த இடங்களை உபயோகிப்பவர்களை பற்றி குறிப்பாக குறிப்பிட முடியாது. ஆனால் இவைகள் முதன் முதலில் ஜுனியர் சாம்பெர் இன்டர்நேஷனல் (ஜேசிஸ்) என்ற அமைப்பால் அவர்களுடைய வருமானம் உயர்த்துதலுக்கு பயன்படுத்தப்பட்டது. [22] திகிலான வீடுகள், செறிவான வளமான தானிய வகைகள், மாட்டு வண்டிகள் போன்ற வண்டிகளில் குழுவான மக்கள் ஏறி பயணிப்பது, [23] ஆகியவைகள் மற்றும் இவைகலில் உள்ள ஆடம்பர வசதிகள் தொழில்கள் வளர்ச்சியை பிரதிபலிப்பதற்கு ஏற்ப உள்ளன. இந்த வகை திகிலான ஈர்ப்புகள் யுனைடெட் ச்டேட்சில் $300-500 மில்லியன் டாலர்கள் என ஒவ்வொரு வருடம் கணக்கிடப்படுகிறது மற்றும் மேலும் 400,000 வாடிக்கையாளர்களை கவருகிறது. இதன்படி பார்த்தால் 2005 -ல் இது உச்சத்தில் இருந்ததாக தெரிகிறது.[22]இந்த ஆர்வம் காரணமாக, தொழில் நுட்பரீதியாக சிறப்பு அம்சங்களுக்காகவும் , மற்றும் அதை சார்ந்து ஆடை அணிவிப்புகளுக்க்காகவும், ஹாலிவுட் படங்களை ஒத்து இந்த பயங்கரமான ஈர்ப்பு பகுதிகளில் செய்யப்படுகின்றன. [24]




 உணவுகள்

திட வகை சுவையான ஆப்பிள் இனிப்புஇந்த விடுமுறையானது வருடாந்திர ஆப்பிள் அறுவடையின் போது வருவதால் இனிப்பான ஆப்பிள்கள் (மற்றபடி மிகவும் இனிப்பானவைகள் எனவும் , மற்றும் பால்,சர்க்கரை, தயிர் இவற்றை கொண்டு கலந்த ஒத்த இனிப்பான சுவையை கொண்ட அல்லது ,மிருதுவான சுவையான ஆப்பிள்கள் எனவும் அறியப்படுகின்றது) ஹாலோவின் காலங்களில் ஒரு விருந்து ஆகும். இந்த ஆப்பிள்கள் ஒரு ஈரப்பதமான இனிப்பு சார் திரவத்தில் உருட்டிவிடப்படுகிறது. சில நேரங்களில் அவைகள் கடலைகளில் உருட்டிவிடப்பட்டு பின்னர் மேற்சொன்னவாறு செய்யப்படுகிறது.


ஒரு காலத்தில் சுவையான ஆப்பிள்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது, ஆனால் நாளடைவில் இந்த வழக்கமானது ஒரு சிலர் கூர்மையான குத்துவைகளையும், சவர கத்திகளையும் ஆப்பிளில் [25] வைத்து கொடுக்கிறார்கள் என்ற பரவலான வதந்தி வந்ததற்கு பிறகு, மறைந்து போயிற்று. ஆனால் இந்த வழக்கத்தால் மிகவும் கடினமாக அல்லது இந்த வகை நிகழ்ச்சிகள் [26]நடந்து தீவிர காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. மற்றபடி பல பெற்றோர்கள் இந்த கொடுமையான நடைமுறைகள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கருதுகின்றனர்இந்த போரட்டத்தின் உச்ச கட்டமாக சில மருத்துவமனைகள் இலவசமாக எக்ஸ்ரேஸ்களை ஹாலோவின் சம்பந்த இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமானவைகளை கண்டுபிடிப்பதற்கு பிடித்துக்கொடுத்தன. சில பெற்றோர்கள் தங்களது பெற்றோர்களை தாங்களே விஷம் வைத்து கொன்றனர் , இந்த ஹாலோவின் நிகழ்ச்சியை ஒட்டி செய்தனர் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் தங்களது ஆப்பிள்களில் தாங்களே ஊசி போன்றவைகளை வைத்து தங்கள் மீது மற்றவர்கள் கவனம் வைக்க வேண்டும் என்பதற்க்காக செய்தனர். வார்ப்புரு:Facts


அயர்லாந்தில் உள்ள பழக்க வழக்கங்கள் இக்கால நடைமுறைப்படி 'பேகிங் ஆப் அ பார்ம் பிராக்' (ஐரிஸின் " பைரின் பிரேக்" )எனப்படுவதாகும். (இக்காலங்களில் தற்போது இது வாங்குவது என அழைக்கப்படுகிறது).அதாவது ஒரு பழ வகையான கேக்கின் மீது ,ஒரு மோதிரம், ஒரு நாணயம், மற்றும் மற்ற வகையான அலங்காரங்கள் அதை கொதிப்படைவதற்கு முன்பாக செய்யப்படுகிறது. இதன்படி யார் ஒருவர் இதிலிருந்து மோதிரத்தை பெறுகிறாரோ அவர் உண்மையான அன்பை வரும் ஆண்டில் பெறுவார் என்பதாகும். இது கிங் கேக் நாகரிகமான எபிபனி விழாவில் நடைமுறைபடுத்துவதை ஒத்ததாகும்.


இந்த விடுமுறையை ஒட்டிய உணவுகள்

இனிப்பான தானியங்கள்
பைரின் பிரேக் (அயர்லாந்து )
[[ஐரிஸ் வகையான வேக வைத்த முட்டைகோசு மற்றும் உருளைகிளங்குகள் ஆகியவற்றை சேர்த்து தூளாக்கி, வெண்ணை அல்லது கிரீம் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் |கொல்கன்னோன் ]] (அயர்லாந்து )
நெருப்பின் மூலம் வரும் இனிப்பு வகை விழாவிற்காக வளர்க்கப்படும் ஒரு சின்ன தீ /0} (யுகே-வில் செயல்படுத்தப்படும் நடைமுறை ஆகும் )
டாஃபி ஆப்பிள் என (ஆஸ்டிரலியாவில் கொண்டாடப்படும் போதும் மற்றும் , இங்கிலாந்து , வேல்ஸ் மற்றும் ஸ்காட்லந்தில் கொண்டாடப்படும் போது "கேண்டி ஆப்பிள்" என்று சொல்வதை காட்டிலும் )அழைக்கப்படுகிறது
ஆப்பிள் சாறு
சாறு
வறுக்கப்பட்ட இனிப்பு தானியம்
பாப்கார்ன்
வறுக்கப்பட்ட பூசணிக்காய் விதைகள்
பூசணிக்காய் பகுதி மற்றும் பூசணிக்காய் ரொட்டி
"முழுவதுமாக" அல்லது தனி தனியாக வைக்கப்பட்ட சிறிய சுவையான ஹலோவின் வண்ணங்களை ஒத்த பகுதிகள். ஹாலோவின் வண்ணங்கள் ஆனது ஆரஞ்சு மற்றும் மரக்கலர்/கருப்பு
கற்பனையாக வடிவமைக்கப்பட்ட தலை வடிவிலான இனிப்பானவைகள்,[[சிறிதான சுவைக்காக சாப்பிடப்படும் ஒரு உணவுவகை. ஆனால் உணவாக அல்லது உணவின் ஒரு பக்துதியாக கடைபிடிக்கப்படுவதில்லை. |பூசணிக்காய்கள் ]]
வௌவால்கள், புழுக்கள், மற்றவைகள் அடங்கும்.

சிறிய பைகளில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு வத்தல்கள் ,சுவையான நூல் வடிவிலான அல்லது குச்சி வடிவிலான தங்கமயமான பிஸ்கட்} மற்றும் [[பால்,தயிர், மற்றும் இனிப்புகள் சேர்த்து தயரிக்கப்படும் ஒரு சுவைத்து சாப்பிடப்படும் ஒரு எளிதில் வளைக்கமுடியாத பொருள் |இனிப்பான சர்க்கரை, வெண்ணை, மற்றும் பால் ஆகியவற்றால் ஆன இனிப்புவகை தானியங்கள் ]].
சாக்லேட்டுகள் ,சுவையான நூல் வடிவிலான அல்லது இனிப்பான சர்க்கரை, வெண்ணை, மற்றும் பால் ஆகியவற்றால் ஆன இனிப்புவகை மற்றும் பசை
பூசணிக்காய் மற்றும் ஆப்பிள் பகுதி ஐஸ் கிரீம் ஆகியவைகள் மகிழ்ச்சி தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன.



உலகத்தை சுற்றி
Halloween around the world

ஹாலோவின் எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை . ஏனெனில் அவரவர்களின் நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவைகள் பொறுத்து இவை கொண்டாடப்படுவது மாறுகின்றன. யுனைடெட் ச்டேட்சில் கொண்டப்படுவதை வைத்து அதன் தாக்கம் மற்ற நாடுகளில் எவ்வாறு கொண்டாப்படுகிறது என்பது அறியப்படுகிறது. ஒரு நாட்டில் ஹாலோவின் நாகரீகமானது அதன் ஹாலோவின் வரலாற்றை பொறுத்து அமைகிறது. இதை பொறுத்து இது தற்போதைய நாட்களில் எவ்வாறு கொண்டாப்படுகிறது என்ற கருத்தை தருகிறது.




 மதம் சார்ந்த கருத்துக்கள்
வடக்கு அமெரிக்காவில் கிறித்தவ பார்வையானது ஹாலோவினை பற்றி முற்றிலும் மாறுபடுகிறது. அங்க்ளிகன் தேவலாயத்தில் கிறித்தவ அமைப்புகள் இந்த நாளை கிறித்தவ கலாச்சாரமான 'ஆல் செயின்ட்ஸ் டே' என்பதை வலியுறுத்தி பேசுகிறது.[27] [28] மற்ற இந்த கருத்தை மறுக்கும் கிறித்தவர்கள் புதுப்பித்தல் நாளாக கொண்டாடுகின்றனர். அதவாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதை கருதுகின்றனர்.[29] செல்டிக் கிறித்தவர்கள் , இந்த விடுமுறை நாளை பற்றி சம்ஹைன் செய்திகளை பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளை பற்றியும் பேசுகின்றனர்.இது பழமையான செல்டிக் கிறித்தவ முறையில் இருந்து புதிதான கிறித்தவ முறை எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை சொல்கின்றது. கிறித்தவம் குடும்பம் சார்ந்த செல்டிக் குறிப்புகள்,ஆன சமூகம், மற்றும் மக்கள் இடையே உள்ள தொடர்பு மற்றும் இறந்தவர்களுக்கு மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. நூற்றாண்டுகள் முழுவதும் , பகன் மற்றும் கிறித்தவ நம்பிக்கையின்படி கல்லிமௌப்ரி என்பது இன்டர்டவைன் என்பது (கலப்பு) அக்டோபர் 31 லிருந்து நவம்பர் 5 வரை கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் ஆகும். இவைகள் யாவும் இருளின் ஆட்சியையும் அவற்றை வெல்லும் ரகசியத்தையும் கூறுவதாக இருக்கிறது."[30]


பல கிறித்தவர்கள் ஹாலோவின் கருத்துக்களுக்கு மறை முகமான முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதசார்பு இல்லாத மறைமுகமான சாத்தான்களுக்கு அர்பணிக்கப்பட நாளாகவே கருதுகின்றனர். மற்றும் இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ஹாலோவின் கொண்டாட்டங்கள் வடக்கு அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக் பரோசியல் ஸ்கூல்ஸ் மற்றும் அயர்லாந்தில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் ரோமன் கத்தோலிக் தேவாலயங்கள் ஹாலோவின் நாளை ஒரு கிறித்தவ மதம் சம்பந்தப்பட்ட நாளாக கருதுகிறது. [31] பாதர் காபிரிலே அமோர்த் , வாடிகன் மூலம் ரோமில் அமர்த்தப்பட்ட கெட்ட ஆவிகளை துரத்தும் மத போதகர் சொன்னார். "இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குழந்தைகள் ஒரே நாளில் சூனியக்காரிகளாக உடை அணியவும் மற்றும் பேய்கள் ஆகா உடை அணியவும் ஒரே இரவில் ஆக விரும்புகின்றனர் .அது ஒரு பிரச்சினை அல்ல என்கிறார். இது ஒரு விளையாட்டு எனில் இதில் ஒன்றும் கெட்டது இல்லை என்றார். [1]. பெரும்பான்மையான கிறித்தவர்கள் உண்மையில் இதில் சாத்தான்களின் பற்றிய எதுவும் இல்லை என்றும் மற்றும் குழந்தைகளின் மத சம்பந்தமானவைகைகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்கின்றனர். இறப்புகளை பற்றியும் அவற்றின் கொள்கைகளை பற்றியும் இதை பற்றி செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்த முறைகள் ஒரு பாடமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இது அவர்களின் இறை வணக்கத்தின் ஒரு பாரம்பரியமாகவும் இருந்திருக்கிறது. [30] கிறித்தவர்களில் இரு பிரிவினரான ப்ரோடெசன்ட்ஸ் மற்றும் அடிப்படைவாதிகள் (கொண்டடப்படுதல்) ஹாலோவின் கருத்துக்களை மற்றும் விடுமுறையை புறக்கணிக்கின்றனர். ஏனெனில் இதை அவர்கள் அற்பமானது என்று கருதுகின்றனர். அவர்களின் "பொது கருத்தாக" இதை ஒரு கெட்டது சம்பந்தமாக கருதுகின்றனர்.[2] அடிப்படைவாதிகள் கருத்துக்கள்படி சமீப காலங்களில் நரக வீடுகள் எனும் நரக வாழ்க்கை அல்லது கொள்கைகளாவது (7}ஜேக் டி சிக் உடைய) ஹாலோவினை பற்றிய தகவல்களை ப்ரோடெசன்ட்ஸ் கொள்கைகள் அதை பயன்படுத்துவதற்க்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும் என்றனர். [32] சிலர் ஹாலோவின் கொள்கைகள் முற்றிலுமாக கிறித்தவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாக கூறுகின்றனர். [33] ஏனெனில் இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய "பெஸ்டிவல் ஆப் தி டெட்" என்பதை சார்ந்ததாகும். சமீப காலங்களில் பாஸ்டனின் ரோமன் கதோலிக் பகுதியில் "செயின்ட் பெஸ்ட்" எனும் செய்தியை ஒரு விடுமுறை நாளில் ஏற்பாடு செய்திருந்தது.[32].பல சம காலத்தைய பிராடேசன்ட் தேவாலயங்கள் ஹாலோவீன் கருத்துக்கள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக கருதுகின்றன, மற்றும் ப்ரோடசன்ட் தேவாலயங்கள் இதை குழந்தைகளுகளுக்காக நடைமுறைபடுத்தப்படும் நிகழ்ச்சியாக கையாள்கின்றன. குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உடை இந்த நிகழ்வின் போது அலங்காரங்கள் மற்றும் விளையாட்டுகள் ஆடி உற்சாகமாக இருக்க முடியும்.


கிறித்தவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஹாலோவிதின் கருத்துக்களில் இருந்து மாறுபடுகின்றன பல விக்காஇனத்தை சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாகரிகமானது "உண்மையான சூனி யக்காரிகளுக்கு " எதிரானது. ஒரே மாதிரியான படங்களை வைத்து சூனியக்காரிகளை பற்றி விளக்கம் கொடுக்கின்றன. கெட்டதை செய்யும் சூனியக்காரர்களை இவைகள் முன்னிலைபடுத்துகின்றன அல்லது அவர்களுக்கு இது விளம்பரமாக அமைகிறது.

சனி, 24 அக்டோபர், 2009

aadhavan video










வியாழன், 15 அக்டோபர், 2009

தீபா”வலி”யும் வெட்கம் கெட்ட தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.


ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு.

அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது.
பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!


தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.


இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை.


ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

புதன், 14 அக்டோபர், 2009

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?





சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் http://www.spypig.com/என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.

இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

புதன், 30 செப்டம்பர், 2009

ஜக்குபாய்’ mp3 download




இந்த link ஐ கிளிக் செய்து mp3ஐ downloadசெய்துகொள்ளுங்கள்

http://www.airvoice.biz/jakkubai.html

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

பெர்முடா முக்கோணம்

வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும், பெர்முடா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின் இயல்பு வியப்பானத்தும் அச்ச மூட்டக் கூடியதும் ஆகும்.




இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன் காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும், இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 கப்பல்களும், 20 விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முடா முக்கோணத்தின் பரப்பினைக் (இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாய் மறைவதும்,பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும் உல கின் மிகப்பெரிய வினாவாக நம் முன் காட்சி அளிக்கின்றன.




உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலன்டைன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை, அவை அதே இடத்தில் வேறுபரிமாணதில் இருக்கின்றன என்று கூறுகிறார்.

அமெரிக்க நாட்டின் மேதை எட்கர் கேஸ், தம் அபூர்வமான சோதிடத் திறமையின் மூலம் அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்து கிடக்கிற அட்லாண்டிக் நகரம் ஒரு சக்தி மையத்தால் கடலுக்கு அடியில் வாழ்பவர்களால்
இழுத்துச்செல்லப் பட்டது என்றும், அவர்களால் அந்த நகரத்தை மறுபடி மேலே வரச்செய்ய இயலும் என்றும்
எழுதியிருக்கிறார்.



படிகங்களிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில் வரும் விமானங்களையும் கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்கு மாற்றிக் காற்றில் மாயமாய் மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள முடியாததாய் உள்ளது.

பெர்முடா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுரம் உள்ள(பூமி உருண்டையில் சரியாக அதன் மறுமுனை) ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி 'பிசாசுக் கடல்' என்றே வெகு காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல! இங்கேயும் பல கப்பல்கள் மாயமாய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு (மேக்னடிச் வெரியடியொன்) மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்கவேண்டும்.



அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (சோங்கேலெட் எனெர்க்ய்) மறுவடிவம் என்றும்
இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில் உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில் திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத் தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற பரமாணுக் களாக மாறிக் காற்றில்கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

பெர்முடா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக இருக்கலாம என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது பரிமாணம் என்கிறார்கள்
விஞ்ஞானிகள்.




இதன் மர்மம் புரியாத உலகம் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், தெரியாத காலச் சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கதைகள் பல சிறகுகளுடன் டிராகுலா வாக விஸ்வரூபமெடுத்துப் பறக்கிறது.
விரிந்து பரந்து கிடக்கும் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் கூடாரமாகக் கிடக்கிறது. இன்னும் விஞ்ஞானமோ, பெரும் அறிவியலார்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத வியப்புகளின் கூட்டுத் தொகையாக இருக்கிறது நமது பூமி எனும் அதிசயம்.

மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி


மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920

இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947

ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954

காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970

பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973

மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979

ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983

டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984

விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989

மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990

2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991

அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992

மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996

மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.


1997
எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000

இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001

வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002

டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004
மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006

மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007

ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010

எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

வியாழன், 10 செப்டம்பர், 2009

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்

சுருக்க குறியீடுகளை அறிய...

எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும்
தள முகவரி : http://www.acronymfinder.com/



விண்டோஸ் நுட்பங்கள் அறிய...



பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.

தள முகவரி : http://windowssecrets.com/


பீட்டா பதிப்புகளை அறிய...


எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/



இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...


HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/



தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி



ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/


தொழில்நுட்ப உதவிகளுக்கு...


கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
தள முகவரி :http://techguy.org/
இலவச மென்பொருட்கள்...



தினமும் ஒவ்வொரு பெறுமதியான மென்பொருட்கள் இலவசமாக (சட்டரீதியாக) வழங்கப்படுகிறது. மறுநாள் அம் மென்பொருளை நீங்கள் பணம் செலுத்தி தான் பெற முடியும்
தள முகவரி : http://www.giveawayoftheday.com/





யாருடைய இணையத்தளம்...



நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server இல்இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு செயப்பட்டிருக்கிறது என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU மட்டும்)
தள முகவரி : http://www.allwhois.com/




DHTML Source code...



இணையத்தளம் வடிவமைப்போருக்கு மிகவும் பயனள்ள தளம் DHTML Source code போன்றவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்

தள முகவரி : http://www.getelementbyid.com/



உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book போன்றவற்றை...


உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book, Email Forms, Message Forum,போன்றவற்றை இலகுவாக உருவாக்கி உங்கள் வலைப்பூவில் இணைப்பதற்கு
தள முகவரி : http://www.bravenet.com/


Online இல் Icon களை வடிவாமைப்பதட்கு...


Online இல் உங்களுக்கு தேவையான Icon களை வடிவாமைப்பதற்கு உதவும் தளம் இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான படத்தை Upload பண்ணி அப்படத்தையும் Icon ஆக மாற்றலாம்
தள முகவரி : http://www.rw-designer.com/online_icon_maker.php

Vanessa Mae Violin



Vanessa Mae Destiny


Vanessa-Mae plays Toccata & Fugue

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் கவனிப்பாடாமல் போன படைப்புகள்


ஏ.ஆர்.ரகுமானின் பல சிறந்தப் பாடலகள், சில திரைப்படங்களின் வர்த்தகத் தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவற்றின் பட்டியல். (எனக்கு ஞாபகம் இருக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே அடுக்குகிறேன்). அதில் "வெள்ளைப் பூக்கள்" பாடல் ( படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) குறிப்பிடத்தக்கது.

1. கண்களால் கைது செய் படத்தில் வரும் "என்னுயிர் தோழியே" பாடல். இதனை சின்மயி மிக அருமையாகப் பாடியிருந்தார். அதில் அவர் ஆரம்பிக்கும் போது வரும் ஹம்மிங் மிக அருமையாக இருக்கும். மற்றுமொரு பாடல். தீக்குருவி என வரும் பாடல். அதை ஹரிணிப் பாடியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே மிக அருமை. ஏனோ, கவனிக்கப்படாமல் போய்விட்டன. மேலும், பாடல்களை எடுத்த விதம் வருத்தத்திற்குரியது. பாரதிராஜாவுடன், இனி ரகுமான் பணியாற்றமாட்டார் என்றும் நினைக்கின்றேன்.

2. இருவர் படத்தில் வரும். பூக்கொடியின் புன்னகை பாடல். அதனை சந்தியா பாடியிருந்தார் . அதில் பல்லவி முடிந்ததும் வரும் இசை மிக அருமையாக இருக்கும்.

3. என் சுவாசக் காற்றே படத்தில் வரும். "திறக்காதக் காட்டுக்குள்ளே" பாடல்

4. Bose the Forgotten Hero (ஹிந்தி) படத்தில் வரும், ஆசாதி பாடல். ரகுமானே பாடுயது. "தனுகா" என்ற பாடலும் சிறந்தப் பாடல்.

5. Swades படத்தில் வரும், எஜ தேஷ் அல்லது தமிழில், உந்தன் தேசத்தின் குரல் மிக மிக அருமையானப் பாடல். அவரே பாடியது.

6. "சித்திரை நிலவு சேலையில் வந்தது" - வண்டிச்சோலைச் சின்னராசு படத்தில் வரும். ஜெயச்சந்திரன், மின்மினி பாடியது.

7. தாளத்தில் வரும் "வா மன்னவா". இது ஹிந்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றப் பாடல். தமிழில் இன்னும் நன்றாக இருக்கும். சுஜாதா பாடியிருந்தார்.

8. ரட்சகனில் வரும் - "நெஞ்சே நெஞ்சே" பாடல். "போகும் வழியெங்கும் காற்றே". இதுவும் சிறந்தப் பாடல்.

9. ஸ்டாரில் வரும் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" - இது கார்த்திக், சித்ரா(இன்னொரு சித்ரா) பாடியது. "மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது" பாடலும் நல்ல பாடல்.

10. லவ் பேர்ட்ஸ்-ல் வரும் "நாளை உலகம் இல்லை என்றால்". மிக அருமையானப் பாடல். சுஜாதா, உன்னி கிருஷ்ணன் பாடியது.

11. "ஊனே ஊனே உருக்குறானே" - அல்லி அர்ஜீனாவில் வரும். இது ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் இடம் பெற்றிருந்தது.

12. "அழகே சுகமா" பாடல் - பார்த்தாலே பரவசம். சாதனாவும், ஸ்ரீனிவாசும் பாடியது. (தகவலுக்கு நன்றி - ஜெயஸ்ரீ)

13. பகத்சிங் ஹிந்தி படத்தில் வரும் சிலப் பாடல்கள்.

14. ரிதம் படத்தில் வரும் "அன்பே" சாதனா பாடியது.

நான் குறிப்பிட மறந்த பாடல்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

இணையத்தளமூடக உங்கள் கணணியை இயக்க முடியுமா?

TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.



1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..

2.

பின்னர் http://www.Twitter.com

என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது

{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}

3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC இயக்கவும். சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.

{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }

அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்


நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.



அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்


இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன


Ctrl + N : புதிய விண்டோவை open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.

Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.

Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.

F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.

Ctrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.

Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.

Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.

Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.

Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.

Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.

Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.

Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.


Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்


Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்

Ctrl + Enter : http://www. , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.

Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு

Ctrl + Shift + Enter : http://www. , .org என்பதை பூர்த்தி செய்வதற்கு

நன்றி --http://tamilhackx.blogspot.com/

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

Potable Software களை இலகுவாக pen drive இல் நிர்வகித்தல்

நீங்கள் உங்கள் Pen Drive இல் அதிகம் Potable Software களை கொண்டு திரிபவரா ? அப்படி என்றால் எந்த Folder இல் எதை போட்டு வைத்தோம் என்று பல நாள் தடுமாறியிருப்பீர்கள்.

இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிர்த்து இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.


இந்த மென்பொருளை உங்கள் pen Drive இல் Install பண்ணி வைத்தீர்கள் என்றால் Windows இன் Start menu போல படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கத்தில் காட்சி அளிக்கும்




இந்த மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download பண்ணிக் கொள்ளுங்கள் பின் உங்கள் pen drive வை கணணியில் இணைத்துவிட்டு இந்த மென்பொருளை Install பண்ணுங்கள்.


பின் அதில் உள்ள options க்கு சென்று அதில் உள்ள Application Manager மூலம் உங்களிடம் உள்ள Potable Software களையும் அதில் Install பண்ணி வைத்துக்கொள்ளவும் தேவையில்லாதவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்கும் : http://www.codyssey.com/products/codysafe.html


இனி என்ன பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

நகைச்சுவை

பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.
பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!!
ஜோ : அதானே!!!!

(வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.
ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே!

***

நேர்காணல் அதிகாரி : நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?

ஜோ : செக்கோஸ்லேவேகியா சார்.

அதிகாரி : அதற்கு ஆங்கிலத்தில் கரெக்ட் ஸ்பெல்லிங் சொல்லுங்கள்.

ஜோ : ஓ..சாரி சார்….மறந்துட்டேன். நான் கோவாவில பிறந்தேன்.

***

அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.

ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

***

நிருபர் : ஜாலியன் வாலாபாக் பத்தி என்ன நினைக்கிறீங்க?

அரசியல்வாதி ஜோன்ஸ் : ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டப் பாக்கு போட்டிருக்கேன். இந்த ஜாலியன் வாலாபாக்கைப் போட்டதே இல்லியே!

***

டிரைவர் : சாரி சார்…பெட்ரோல் உறைஞ்சு போச்சு. இனிமேல் வண்டி முன்னாடி ஒரு அடிகூட நகராது.

ஜோ : அப்படியா.. பரவால்ல.. ரிவர்ஸ் எடு.. வீட்டுக்காவது போய்ச் சேரலாம்.
*****


பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?

ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.

***

ஜோன்ஸ் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் பாண்டு அவரது பின்னால் நின்று கொண்டு "ஹா... ஹா..ஹா. நான் உன்னுடைய பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்" என்று கூற, அதிர்ந்துபோன ஜோன்ஸ், பாஸ்வேர்ட் என்னவென்று கேட்க, பாண்டு சொல்கிறார். "நான்கு ஸ்டார்ஸ் தானே".

உடனே ரிலாக்ஸ் ஆன ஜோன்ஸ், "அப்பாடி... அது தப்பு. 2298 என்பதுதான் சரி.

***

சோம்பேறித்தனம் தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி - நேருஜி

நம்முடைய எதிரியையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் - காந்திஜி

ஜோன்ஸ் : அப்படின்னா சோம்பேறித்தனத்தை நேசிக்கணுமா?

*******
ஜோ : நான் செத்துட்டேன்னா எனக்குப் பிறகு நீ விக்டரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்.
மனைவி : அவர் உங்க பரம எதிரியாச்சே!!!
ஜோ : பின்ன..நான் எப்படித்தான் அவனப் பழிவாங்கறது.

****

கிருஷ்ண அவதாரத்தில் ஒரு சந்தேகம்"

ஆசிரியர் மாணவர்களுக்குக் கிருஷ்ண பகவானின் அவதார மகிமையைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

"கம்சனுடைய தங்கைக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்லும். இது விதி என அசரீரி கூறுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரு சிறையில் அடைக்கிறான்.

முதல் குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை விஷம் கொடுத்துக் கொல்கிறான். சிறிது காலம் கழித்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை மலை உச்சியிலிருந்து தூக்கிப்போட்டுக் கொன்றுவிடுகிறான். மேலும் சில காலம் கழித்து மூன்றாவது குழந்தை பிறக்கிறது. அதை..." ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டே போக, ஒரு மாணவன் எழுந்து கேட்கிறான்.

"சார் கிருஷ்ணாவதாரத்தில ஒரு சந்தேகம்"

"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

"சார்! தங்கைக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அப்படிங்கறது கம்சனுக்குத் தெரியும்தானே?"

"ஆமா! அதிலென்ன சந்தேகம்"?

"அப்புறம் எதுக்கு சார் இந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரே சிறைக்குள்ள அடைக்கிறான். அவனுக்கு வெவரம் பத்தாதோ?"

நகைச்சுவை துணுக்குகள்

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

****

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

ஆசிரியர் : உலகத்திலேயே மிகச் சிறந்த தன்னம்பிக்கையாளர் யார்?

மாணவன் : எங்க பக்கத்து வீட்டு 95 வயசு பாட்டிதான் சார்.

ஆசிரியர் : எப்படிச் சொல்ற?

மாணவன் : அது நேத்து ஒரு செல்போன் வாங்கி அதுல லைஃப் டைம் கார்டு போட்டுத் தன் பேரன்கிட்டப் பேசுதுன்னா பாருங்களேன்

|*****

இரண்டு மாணவர்கள் தீவிர விவாதத்தில் இருந்தனர். அவர்களை நெருங்கிய ஆசிரியர் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க, அவர்கள் கீழே கிடந்தது என நூறு ரூபாயைக் காட்டிவிட்டு, 'யார் மிகப்பெரும் பொய்யைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு இந்த நூறு ரூபாயைக் கொடுப்பதாக இருக்கிறோம்' எனக் கூறினர். கோபமடைந்த ஆசிரியர், இந்த வயதிலேயே பொய்யா... நான் உங்கள் வயதில் இருக்கும்போது பொய் என்றால் என்னவென்றே தெரியாது. அது தெரியுமா உங்களூக்கு?

மாணவர்கள் இருவரும் ஆசிரியரிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு அமைதியாகச் சென்றனர்.

****

புதன், 5 ஆகஸ்ட், 2009

இது எப்படி இருக்கு

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள்.

ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.

படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி.




படம் 2 : ஓரமாய் ஒரு சிறு தொடுதல்.





படம் 3 : பாதி உடைந்தும், பாதி உடையாமலும் !!! வாவ் !.



படம் 4 : கடைசியில் அவ்ளோ தான் !!!!

புலி என்றா சும்மாவா?

இங்க இருக்கிற புலியோட போட்டோவ ஏலுமென்றால் டவுண்லோட் செய்து பாருங்க...

இணையத்தில் இருகும் உங்களது போட்டோவை யாரும் டவுண்லோட் செய்யாமல் இருக்க இந்த வழிய பயன்பபடுத்தி பாருங்கலேன்..
இந்த லிங் ல தனுங்க நானும் பார்த்தன்


http://www.eobcards.com





border=0>

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

இன்றைய..பல குழந்தைகள்..இளைஞர்கள் மத்தியில்..தீரா பிரச்னையையாக இருப்பது Obesity என்னும் உடல் பருமன் தான்.

உடல் பருமன் சர்க்கரை நோய்,இதய நோய்,ரத்த அழுத்தம்,பக்கவாதம் ஆகிய நோய்களுக்கு ஒரு காரணமாய் அமைந்துவிடுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி..இருபது சதவிகிதம் குழந்தைகளும்,60 சதவிகிதம் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக உடல் பருனாய் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம்..நமது உணவில் ஏற்பட்டுவரும் மாற்றம்தான் என தெரிய வந்துள்ளது.இட்லி,தோசை,பொங்கல்..ஆகியவை..இந்திய குடும்பங்களிலிருந்து..கொஞ்சம்..கொஞ்சமாய் மறைந்துஅவற்றின் இடத்தை..நூடில்ஸ்,பிஸ்ஸா,பர்கர் ஆகியவை பிடித்து வருகின்றன.

மேலும்..பணம்,புகழ்,ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு..பலர்..தங்கள் உடல்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஒழுங்கான உடற்பயிற்சி,நடை ஆகியவை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக நினைத்து செயல் பட வேண்டும்.

BMI எனப்படும் body mass index ஐ நினைவில் கொள்ளுங்கள்..அதாவது..நமது எடையை கிலோகிராமில் எடுத்துக் கொண்டு..அதை நம் உயரத்தால்..உயரத்தை மீட்டர் ஸ்கொயரால்(M2) வகுக்கு வேண்டும்.

25 க்குள் ஈவு இருந்தால்..சரியான எடை
25 முதல் 30 வயதுவரை எடை அதிகம்
30க்கு மேல் Obesity

ஆரோக்ய உணவை அருந்தி..சரியான உடற்பயிற்சி செய்து..நோயை நம்மை அண்டவிடாமல் தடுப்போம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ...

புதன், 29 ஜூலை, 2009

மொட்டை போட்ட நடிகைகள்!

''ஹீரோக்கள் மட்டும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நல்ல பெயர் வாங்கிகிட்டு போயிடுறாங்க. ஆனா... எங்களை மட்டும் குத்துப் பாட்டுக்கும், கூத்தடிக்கிறதுக்கும் மட்டும் பயன்படுத்திகிறாங்க. நாங்க என்ன செய்யுறது வித்தியாசமா நடிக்க யாரும் வாய்ப்பு கொடுக்கலயே...



என்னதான் ரஜினி, விஜய்க்கூட ஜோடி போட்டு நடித்தாலும் கொஞ்ச நாளைக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியலை'' பிரபலமான நடிகைகள் இப்படி பொலம்பிக்கிட்டு இருக்குறாங்கன்னு நமக்கு செய்தி வந்துச்சு.



உடனே அப்படி பொலம்பற நடிகைகளையெல்லாம் ஒண்ணு சேத்து ரூம் போட்டு யோசிக்க வைச்சோம். அவங்களோட நாமும் சேர்ந்து தலையை பிச்சுக்கிற நிலைமை வந்துச்சு.

அதான் மொட்டை அடிச்சுட்டோம்.














இந்த கெட்டப் எப்படி இருக்கு!!!

ஸாரி, இத யாரும் நம்ம வேண்டாம். ஹய்யோ.......... ஹய்யோ...........




பின் குறிப்பு: புது இயக்குனர்களுக்கு... இந்தப் படத்தை பார்த்து ஐடியா ஒர்க்கவுட் ஆச்சுன்னா எங்கள தனியா கவனிங்க...

வெள்ளி, 24 ஜூலை, 2009

இது உண்மையான காதல்










தன் உறவுகள் செத்து மடியும் போது ஒன்றுமே தெரியதது போல தங்களின் வேலைகளை செய்துகொண்டு திரியும் இந்த உலகத்தில் இப்படியும் ஒரு உறவு.பிரிவை தாங்க முடியாமல் அழும் இந்த பறவையை பார்த்தாவது மனிதனுக்குள் மனித நேயம் வளரட்டும்....

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது





ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

நிறம்:



ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.
[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!]

முக தோற்றம்:


ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.

மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.
சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.





மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.

உடை அலங்காரம்:


பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.



பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.
இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.

சிகை அலங்காரம்:



லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.

உடல் தோற்றம்;





ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.


மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!


முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]

மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!
Related Posts Plugin for WordPress, Blogger...