ஞாயிறு, 31 மே, 2009
facebook & ஈஸ்டர் egg
முகப்புத்தகம் என்னும் Facebook அண்மைக்காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமூக வலையமைப்பு. அத்தகைய மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ள கணணி மென்பொருள் கலைஞர்கள் பல Easter Egg களினை முகப்புத்தகத்தில் உருவாக்கியுள்ளார்கள். இங்கே அவற்றில் சிலவற்றைத் - நான் அறிந்தவற்றை - தருகின்றேன். நீங்கள் கொஞ்சம் செய்து பாருங்களேன்.
1. Click on Fackbook background.
Now press the following keys 'UP', 'UP', 'DOWN', 'DOWN', 'LEFT', 'RIGHT', 'LEFT', 'RIGHT', 'B', 'A', 'ENTER'.
இப்போது மீண்டும் Fackbook background இல் click செய்யுங்கள். இப்போது பாருங்களேன்...
2. உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அரட்டை(CHAT)யில் ஈடுபடும் போது பின்வரும் சொல்லினை பதிந்து பாருங்கள். : putnam:. [ No space in between ':' and 'p'. I have to put a space character in between ':' and 'p'. ] என்ன முயற்சித்துப் பார்த்தீர்களா...
வெள்ளி, 29 மே, 2009
சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம்
கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம் இது. தனது மரணத்திற்கு பின்னரே இந்த கடிதம் கியூப மக்கள் மத்தியில் வாசிக்கப்பட வேண்டும் என்பதே சேயின் விருப்பமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சேயும், பிடெலும் பிரிந்துவிட்டார்கள் எனவும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் பல்வேறுபட்ட வதந்திகளை அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவான ஏகாதிபத்திய நாடுகள் உலவவிட்டதன் காரணமாக, சே கொங்கோவில் இருந்த சந்தர்ப்பத்தில், கியூப மக்கள் மத்தியில் பிடெல் இந்த கடிதத்தை வாசித்தார்.
பிடெல்,
இந்த நேரத்தில் எனக்கு பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது. புறப்படத் தயாரான போது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது.பிறகு எல்லாம் புரிந்தது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள்.
இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது. கியூப புரட்சியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகின்றேன்.
கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புக்களிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகின்றேன்.கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது.
புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கின்ற அர்ப்பணிப்போடும் நான் கடந்த காலத்தில் பணிபுரிந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியாரா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரடம்சிகரத் தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாக புரிந்துகொள்ளவில்லை.அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கின்றேன். கரீபிய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்த சந்தர்ப்பத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாக புரிந்து கொண்டு எந்த தயக்கமும் இன்றி பின்தொடர்ந்ததற்கு பெருமைப்படுகின்றேன்.
என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது.
மகிழ்ச்சியோடும், வருத்தங்களோடும் தான் நான் இதனை செய்கின்றேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான உலகத்தைக் கட்டி எழுப்புவார்கள் என்கின்ற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கின்றேன்.தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகின்றது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையை கொண்டு செல்கின்றேன். மக்களின் புரட்சிக்கரத் தன்மைகளைப் பெற்று செல்கின்றேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகின்ற உணர்வை ஏந்திச் செல்கின்றேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஆழமான காயங்களைச் சரிசெய்கின்றது.
கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறொரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாகய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூப புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கின்றேன். அப்படியே நடந்து கொள்வேன்.என்னுடைய மனைவிக்கும், குழந்தைக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. மகிழ்ச்சிதான். வாழ்வதற்கு தேவையானவற்றையும் கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கின்றது.
உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கின்றேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.எனது முழுமையான புரட்சிகர உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத்தழுவிக் கொள்கின்றேன்.
சே.
வியாழன், 28 மே, 2009
எங்கே புத்தன்?...
புதன், 27 மே, 2009
நகைச்சுவை
டாடி
மகளே.. சின்ன வயசுல என்னை நீ வாய் நெறய ‘அப்பா.. அப்பானு கூப்பிடுவ. இப்போ ஏன் ‘டாடி.. டாடின்னு கூப்பிடுறே?அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
சின்னதொரு செய்தியும் சிரிக்க ஒரு ஜோக்கும்
உயிரினங்கள் வாழக் கூடிய இடம் எனக் கருதப் பட்ட ஒரே இடமான பூமி இன்னும் சில ஆயிரம் வருடங்களில் அத்தகுதியை இழந்து விடும் அபாயம் தோன்றியிருப்பதால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற இன்னுமொரு இடத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கிலான ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடைப்பெற்று வருகின்றன. அதிலும் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது செவ்வாய் கிரகமே.
அவ்வகையில் Russian academy of science இன் ஏற்ப்பாட்டில் Mars 500 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை அண்மித்துள்ளது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தொண்டர்களின் பங்கேற்கையுடனான பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.
இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.
இத்தகவலை டிவி யில் பார்த்த போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு Joke ஞாபகம் வந்தது.
சந்திரனில் மனிதன் வாழும் சாதகமான சூழ்நிலைகளை அடுத்து ஒவ்வோர் நாட்டவரையும் கொண்டு சென்று அங்கு குடி வைத்தனராம்.
முதலில் வழமை போல் அமெரிக்கா,
அடுத்து சீனா துரிதமான முன்னேற்றம் அங்கும் இருக்கும் என்று,
பிறகு ரொம்பப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியா
போனால் போகுதென்று இலங்கை
அவர்களுக்கேற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அப்பீட்டானவர்கள் பத்து வருடம் கழித்து சென்று பார்த்தால்
அமெரிக்கரின் பகுதி பெரிய twin tower எல்லாம் கட்டி படு சோக்காய் இருந்தனர்.
சீனர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஏகப்பட்ட factoryக்கள் என கலக்கத் துவங்கினர். அவர்களின் அதிகப்படியான ஆர்வக்கோளாறு சந்திரனையே கருப்பாக்கி இன்னொரு சந்திரன் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியர்கள் இருக்கும் பகுதி ஜனநாயகவாதிகள் இல்லையா அது தேர்தல் காலம் போலும் தோரணங்களும் மேடைகளும் அப்பப்பா பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு ஓரமாய் இருந்த பேனரில் " அகில பிரபஞ்ச டாக்டர் விஜய் ரசிகர் மன்றம் சந்திரக் கிளை" என்ற வரிகளை பார்த்து சிரித்தவாறே மற்ற பக்கம் திரும்பினால் எலுமபும் தோலுமாய் ஒரு கும்பல் அட நாம இங்க எதியோப்பியா சோமாலியா காரனை கூட்டிக் கொண்டே வரவில்லையே எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தால் அட நம்ம இலங்கையன்.
உடனே அவனை நெருங்கி விசாரிக்க பதட்டப்படாமல் சொன்னான்
" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள்
மூன்று பேராசிரியர்கள் ஒரு நீர் வீழ்ச்சியைப் பார்க்க பிக்னிக் போனார்கள்.ஒருவர் இயற்பியல் பேராசிரியர் அவர் சொன்னார்,
'நான் இந்த நீரின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றலையும் கணக்கிட விரும்புகிறேன்' என்று சொல்லியபடியே நீர் வீழ்ச்சியில் குதித்து ஆள் கணிணி வல்லுனர். அந்த நீர்வீழ்ச்சியின் அழகை கிராபிக்ஸில் காட்டப் போகிறேன் என்றபடியே அவரும் குதித்து விட்டார்மூன்றாவது நபர் ஒரு வேதியியல் பேராசிரியர்.மற்ற இரண்டு பேரும் குதித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் தன் குறிப்பேட்டை எடுத்து இப்படி எழுதினார்'இரண்டு பேராசிரியர்களும் தண்ணீரில் கரையக் கூடியவர்கள்'
ஒரு வயதான மனிதர் டாக்டரிடம் போனார்.
'டாக்டர் என் கண்ணைச் சுற்றி கருவளையம் புள்ளிகள் ஈறூKKஊ'டாக்டர் சொன்னார்,'வயசானா அப்படித்தான் வரும்
'வயதானவர்:'எந்த சாப்பாடும் ஒத்துக்கலை'
டாக்டர்:'அதுவும் வயசானதால் தான் உங்க செரிமான திறன் குறைஞ்சிருக்கும்.வயதானவர்:எனக்கு முதுகு வலி'
டாக்டர்:'வயசாயிடுச்சில்ல''என்ன எதுக்கெடுத்தாலும் வயசாயிடுச்சினு சொல்றீங்க எனக் கோபப்பட்டார்.
டாக்டர் சொன்னார்,'கரெக்ட் இதுதான் அறிகுறி.உங்க உபாதையைச் சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டேன் என்கிறீர்களே இதுதான் வயசானதின் அறிகுறி'
ஒரு கணிணி மாணவர் திரைப் படம் தயாரித்தால் எப்படி பெயர் வைப்பாராம்?இப்படித்தான்..7 GB ஹார்ட் டிஸ்க் காலனிபுதுக்கோட்டையில் இருந்து வைரஸ்காலமெல்லாம் ஆண்ட்டி வைரஸ் வாழ்கவைரஸை வேட்டையாடு விளையாடுசொல்ல மறந்த பாஸ்வேர்டுஒரு மவுஸின் கதை
செவ்வாய், 26 மே, 2009
facebook பயனுள்ள டிப்ஸ்கள்
நெருப்பு உலவியின் side bar இல் facebook chat இனை நிறுவிக்கொள்ள
நெருப்பு உலவியின் சைடு பாரில் facebook chat இனை நிறுவி facebook செல்லாமலேயே chat செய்ய முதலில் உங்கள் நெருப்பு உலவியில் bookmark பகுதியைத் திறந்து அதில் organize bookmark இனைத் தெரியுங்கள்.
அடுத்ததாக கீழே காட்டியுள்ளவாறு நிரல்களை நிரப்புங்கள்
§ Name: Facebook Chat
§ Location: http://www.facebook.com/presence/popout.php
அதிலுள்ள Load this bookmark in sidebar. இனை டிக் செய்யுங்கள்.
அதன்பிறகு நெருப்பு உலவியின் View பகுதிக்குச் சென்று Sidebar இனைத் தெரிந்து அதில் bookmark இனைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போது facebook chat உங்கள் சைடு பாரில் தயார்!
Facebook செல்லாமலேயே உங்கள் Desktop இல் chat செய்ய
இங்கே http://www.gabtastik.com/GabtastikWin.htmlசென்று Gabtastik என்ற மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். Facebook செல்லாமலேயே நீங்கள் Chat செய்ய முடியும்.
Facebook இல் உங்கள் ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள
இந்த https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442நெருப்பு உலவியின் add-ons உங்கள் Facebook ஆல்பத்தை அப்படியே தரவிறக்கி எடுத்துக்கொள்ள உதவும்.
உங்கள் பிளாக்கின் RSS இனை Facebook இல் இணைக்க
Facebook இல் உங்கள் Profile பகுதிக்குச் சென்று அதில் What's on your mind? என்ற பெட்டிக்குக் கீளே உள்ள Settings இனை கிளிக்குங்கள்
அதில் Blog/Rss இனைத் தெரியுங்கள்.
அதில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை அமுக்குங்கள். இனி உங்கள் பிளாக்கின் இடுகைகள் தானாகவே Facebook இல் தெரியும்.
LinkWithin